குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 28, 2022

ஸ்ரீ அரவிந்தரின் உணர்வின் தளங்களும் காயத்ரி சாதனையும்

 

Plane of Existence: சத்

Plane of Consciousness: சித்

Plane of Delight: ஆனந்த

Plane of Super Mind: விஞ்ஞான

Plane of Pure Mind: மனம்

Plane of Pure Life: பிராணன்

Plane of Pure Matter: அன்ன உடல்

ஸ்ரீ அரவிந்தர் சத் எனும் உயர்ந்த உணர்வுத் தளத்திலிருந்து இறையுணர்வு கீழிறங்கி அன்ன உடலை அடைவதன் மூலம் மனிதன் உருவாகிறான் என்பதை அறிவிக்கிறார்.

இது காயத்ரி சாதனையின் சப்த வ்யாக்ருதிகளினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சத் - சத்யம்

சித் - தப

ஆனந்தம் - ஜன

விஞ் ஞான - மஹ

மனம் - ஸ்வஹ

பிராணன் - புவ

அன்ன உடல் - பூர்

சாதகன் முதலில் ௐம் என்ற பரப்பிரம்ம சக்தியை பூர், புவஹ, ஸ்வஹ என்ற அன்ன உடல், பிராண உடல், மன உடலிற்கு புத்தியைத் தூண்டும் பேரொளி மூலம் கொண்டுவந்து நிரப்பி மஹ எனும் விஞ்ஞானமய கோசத்தினைப் பெறுவதே மூன்று வ்யாக்ருதிகள் சேர்ந்த திரிபதா காயத்ரி சாதனையினுடைய நோக்கம்.

இதே செயலை பதஞ்சலி மகரிஷி ப்ரக்ருதி வரையிலான 24 ஆன்ம தத்துவங்களில் ஸமாதி பழகுவதால் யோகி ருதம்பரா ப்ரக்ஞை என்ற தெய்வீக அறிவைப் பெறுகிறான் என்கிறார்.

திரிபதா காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களால் இந்த 24 தத்துவங்களையும் பேதித்து ருதம்பரா ப்ரக்ஞையைத் தருகிறது.

அன்ன உடல், பிராண உடல், மன உடல் மூன்றையும் தாழ் நிலை முக்கோணம் எனவும் சத், சித், ஆனந்தம் ஆகிய மூன்றையும் உயர் முக்கோணம் என்றும் குறிப்பிடலாம். இந்த இரண்டையும் இணைக்கும் உயர் ஞானம் மஹ எனும் விஞ்ஞானமய கோசம். இதுவே ஷட்கோணத்தின் விளக்கமும் ஆகும்.

காயத்ரி சாதனையின் முதல் நோக்கம் உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றையும் அந்தப் பேரொளியால் நிறைத்து விஞ்ஞானமய கோசம் பெறுதலாகும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...