குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 25, 2022

சரஸ்வதி உபாசனையும் காம உருமாற்றமும்

 

நெப்போலியன் ஹில் தான் Sex Transmutation - காமத்தின் உருமாற்றம் பற்றிச் சொன்னாரா என்றால் இல்லை என்பதே பதில். பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத ரிஷி மரபு இதைத்தான் கற்கவேண்டிய வித்தை என்று கற்பித்து வருகிறது.

சரஸ்வதி உபாசனையின் ஸித்தி எமக்கு ஆறு படிகளில் கிடைக்கும்.

காமத்தினால் உருவாகும் படைப்பாற்றலிலிருந்து பிரவாகிக்கும் ஆற்றலை சரியாக உருமாற்றினால்;

1. முதல் படியில் தடையற்ற எண்ண ஓட்டத்தை உருவாக்கி சிந்திக்கச் செய்வது,

2. இரண்டாவது படியில் சிந்தித்த எண்ணத்தை சரியாக வாக்கினால் சொல்லக்கூடிய ஆற்றல்.

3. மூன்றாவது நிலையில் எழுத்தினால் எழுதக் கூடிய ஆற்றல்.

4. நான்காவது நிலையில் கவித்துவம், நாட்டியம், இசை என்று நுண்கலைகளூடாக எமது படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெறுதல்.

5. ஐந்தாவது நிலையில் யோகத்தின் மூலம் பிரபஞ்சத்தின் நுண் அறிவான மேதா சக்தியைப் பெறுதல்.

6. பிரம்மத்தை ஆச்சரித்து பிரம்மம் என்ற இறையுடன் ஒன்றுதல் (பூரண குண்டலினி விழிப்பு)

இதை எப்படி சாதிப்பது என்பதற்கான அடிப்படையைத்தான் கீழ்வரும் மந்திர சங்கல்பத்தின் மூலம் பெறுகிறோம்.

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா

இது வித்தியாரம்பத்தின் போது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் மந்திரம்; இதன் பொருள் காம ரூபிணி - காமத்தின் வடிவாக இருப்பவளே எனது எண்ணமும் வாக்கும் நதிபோல (சரஸ்) ஓடச் செய்பவளே நான் உன்னை வணங்குகிறேன்; எனது வித்தையை கற்கும் இந்த ஆரம்ப முயற்சி பலனளிக்கச் செய்வாயாக என்று வணங்குகிறோம்.

இந்த மந்திரத்தின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு சிறு குழந்தையும் தனது படைப்பாற்றலை - காம சக்தியை உருமாற்றி தான் கற்கும் கல்வியில் - வித்தையில் சிறந்த எண்ண ஓட்டத்தையும், வாக்கினூடாக மொழியினைச் செம்மையாக உபயோகிக்கும் ஆற்றலையும் பெற்றுச் சிறக்க வேண்டும் என்பதே.

அதாவது ஒரு குழந்தை தனது படைப்பாற்றல் காமமாக வெளிப்படும் போது சரஸ்வதியைக் காமரூபிணியாக உணர்ந்து, உடலில் தாழ்ந்த காமமாக வெளிப்பட்டுவிடாமல் தான் பயிலும் வித்தைக்கு அந்த ஆற்றல் மடைமாற்றப்பட்டு, உயர்ந்த அறிவாக உருமாற்றப்பட்டு நதிபோல மனதிலும், வாக்கிலும் பிரவாகிக்கச் செய்யும்படி தன்னைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை இந்த மந்திரம் சித்தமாகிய ஆழ்மனதில் ஏற்படுத்துகிறது.

எந்த வித்தையை கற்கும் பொழுதும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஒவ்வொரு மாணவனும் தனது காமசக்தி உயர்ந்த அறிவாற்றலின் பக்கம் செலுத்தப்பட்டு மனம், அறிவாற்றல் பெற்றவர்களாக உருமாறுவதற்குரிய சங்கல்பத்தைப் பெறுவதே சரஸ்வதி உபாசனையின் நோக்கம்!

சரஸ்வதியின் ஆற்றல் அல்லது செயல் - அதாவது தனது காமத்தை மனோ அறிவு சக்திகளாக உருமாற்றும் திறன் இல்லாவிட்டால் மனிதன் தனது மூலாதார நிலையான ஆகாரம், மைதுனம், பயம், தூக்கம் ஆகியவற்றிற்கு மாத்திரம் தனது ஆற்றலைச் செலவிட்டு மனதை, அறிவை வளர்க்காமல் விலங்காக இருந்திருப்பான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...