குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 23, 2022

ஹட யோகத்தில் மகா குஹ்ய சாதனா ( = இரகசிய சாதனை)

 

ஹடயோகம் இடகலை, பிங்கலை நாடிகளை சமப்படுத்தி குண்டலினியை விழிப்பிக்கும் யோக சாதனை முறை.

ஹடயோகத்தில் குண்டலினி விழிப்பிற்கு மிக உயர்ந்த சாதனையாக மூன்று பயிற்சிகள் கூறப்படுகிறது; இது மூன்றையும் மஹா குஹ்யம் என்று ஸ்வாத்மாராம யோகீந்திரர் கூறுகிறார். அதாவது மிகப்பெரிய இரகசியம் என்று அர்த்தம்.

முதலாவது மகா முத்திரை - இது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியினை சுருண்டு படுத்திருக்கும் நாகத்தின் வாலில் தடிகொண்டு தட்டி எழுப்பும் பயிற்சி. இதனால் சாதகன் குண்டலினி விழிப்புப் பெறுவான்.

இதற்கு அடுத்து பயிற்சிக்க வேண்டியது; மகா பந்தம்; விழிப்படைந்த குண்டலினி சக்தியை எப்படி நாடிகளில் கட்டுவது - (பந்தம் என்றால் கட்டுதல் என்று அர்த்தம்) என்ற முறை.

மூன்றாவது மகாவேதா - வேதை என்றால் பிளப்பது என்று அர்த்தம். குண்டலினியால் சக்கரங்களை வேதிப்பது என்று அர்த்தம். இந்த மகா வேதா இல்லாமல் முதல் இரண்டும் பயன் தராது.

குண்டலினி சஹாஸ்ராரம் வரை சென்று, கீழிறங்காமல் நின்று, சக்கரங்களை பேதித்து இடகலை, பிங்கலை சமப்பட்டு ஹட யோகம் சாதிக்க இந்த மூன்றும் ஒன்றாக பயிற்சிக்கப்பட வேண்டும்.

ஆசனம் செய்யக்கூடிய எவரும் இந்த மூன்றையும் இலகுவாகச் செய்துவிடலாம் என்று எவரும் நினைத்தால் அதற்குத்தான் இந்த மூன்றையும் சேர்த்து மஹாகுஹ்யம் என்று சொல்கிறார். பார்ப்பதற்கு உடற்பயிற்சி போல் இலகுவாகத் தெரிந்தாலும் இவற்றைச் செய்யும் போது செய்ய வேண்டிய நாடி தாரணைகள், உப முத்திரைகள் எல்லாம் மறைப்பாக குருவிடம் இருக்கிறது.

இயம, நியாதிகள், மிதாகாரம், ஆசனப் பயிற்சி, ஷட்கர்மம், பிரணாயாமம் இவற்றில் முறையாக தனது உடல், மனம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி குண்டலினி விழிப்பிற்கு தகுதியானவனுக்கு குரு பிரத்தியேகமாக உபதேசிக்கப்படுவதால் மகா குஹ்யம் என்று கூறப்படுகிறது.

இவற்றை உடலால் ஆசனம் செய்யக்கூடிய எவரும் செய்ய முடிந்தாலும் குண்டலினியை விழிப்பிக்க குருமுகமாய் பயிலுதலின் அவசியத்தை ஸ்வாத்மாராம யோகீந்திரர் ஹடயோக பிரதீபிகையின் மூன்றாவது உபதேசத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...