குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 02, 2020

பரதமும் சிவயோகமும்

பரதநாட்டியம் வெறுமனே கண்ணுக்கு இன்பம் தரும் உடல் அசைவு இல்லை! உணர்வைப் பேருணர்வாக்கக்கூடிய வித்தை என்பதை பரதமுனிவரின் பரத சாஸ்திரத்திற்கு அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி என்ற விளக்கவுரை விளக்குகிறது! 
நாட்டியத்தினை எப்படி யோகமாக்கலாம் என்பதை விளக்கியுள்ளார். 
இசை, நடனம், கவிதை, நாடகம் இந்த நான்கும் மனதை துரிதமாக தன்பால் இழுப்பவை. அதனால் மனதின் சலனத்தைக் குறைத்து மந்த நிலையைப் போக்கி உற்சாகத்தை தருபவை. 
இதனாலேயே நல்ல இசை, நடனம், கவிதை, நாடகம் - சினிமா பார்த்தால் மனம் உற்சாகமடைகிறது. இந்த உற்சாகமடைதல் சலனமடையும் மனதை உள்முகமாக திருப்பி உயர் உணர்வு அடைவது எப்படி என்ற இரகசியமே பரத சாஸ்திரம், ஓசை நயம் மிகுந்த கவிதை, இன்னிசை, விறுவிறுப்பான திரைக்கதை உள்ள நாடகம் எல்லாம்! 
இதற்கு இந்தக்கலைகள் உணர்ச்சியைத் தூண்டாமல் மனதை இன்பமடையச் செய்து, உற்சாகமுறச் செய்யக் கூடியவையாகவும் உணர்வை அகமுகமாகத் திருப்பக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. 
இரண்டாவது ஒரு நடனத்தை மெய்மறந்து பார்க்கும் உணர்வு ஆங்காரத்திலிருந்து (ego) விலகி நிற்கும். ஒரு சினிமாப் படத்தைப் பார்க்கும் அந்தக் கதையில் நாமும் ஒருவராக இணைந்திருக்கும் நிலை! ஆகவே நல்ல கலையை இரசிக்கும் போது ஆணவம் அற்ற நிலையை நாம் அனுபவிப்போம்! மூன்றாவது இந்தக் கலைகளை ரசிக்கும் போது நாம் எமது மனக் கண்ணில் உருவகித்து அனுபவிப்போம். இப்படி மனம் உருவகம் செய்வதால் உணர்வு படைப்புத் திறன் பெறுகிறது. இப்படி கற்பனையின் மூலம் அனைத்தையும் மனதிலேயே உருவகிக்கக் கூடிய ஆற்றல் பெறுவதால் அவன் தனது நடத்தையில் வீணான செயல்களைக் கொண்டு வருவதைத் தடுக்கும் படைப்பாற்றலைப் பெறுகிறான். உணர்வை தனது அகவயமாக்கும் ஆற்றலைப் பெறுகிறான். 
இதனாலேயே கலைஞர்கள் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே கலைஞர்களை நாம் கடவுளாகக் கொண்டாடுகிறோம். 
இந்த அடிப்படையில் அபி நவகுப்தர் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் 36 அத்தியாயங்களையும் 36 சைவ தத்துவங்களுடன் ஒப்பிட்டு அபிநவபாரதி என்ற உரை எழுதியிருக்கிறார். பரதசாஸ்திரத்தின் 36 அங்கங்களும் சைவத் தத்துவத்தின் 36 தத்துவ சுத்திகளைக் குறிப்பதை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...