குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதாசக்தி - 06 :மஹாநாரயண உபநிஷத மேதா சூக்த விளக்கம்

மஹா நாரயண உபநிஷத மேதாசூக்தம் மேதா தேவி பற்றிக் கூறும் குறிப்புகளை அறிந்துக் கொள்வது மேதா சக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். இந்த சூக்தத்தில் ஆறு மந்திரங்கள் இருக்கின்றது. 

முதல் மந்திரம் மேதா தேவியின் பிரபாவம் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

1) பிரபஞ்சம் எங்கும் பரந்தவளாக, 

2) மங்களமானவளாக, 

3) மனதின் அடிப்படைக் காரணியாக உருவகிக்கிக்கப்படுகிறது. 

நாம் பெற வேண்டியது/தியானிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய விபரம் இதனால் பெறப்படுகிறது. 

எங்கும் பரந்தவளாக மேதா தேவியை உருவகிப்பதால் எங்கிருந்தாலும் மேதா சக்தியைப் பெறலாம் என்ற உறுதி பெறப்படுகிறது. 

மங்களகரமானவள் என்று உருவகிப்பதால் எமக்கு மங்களம் வந்து சேர்கிறது. மனதின்/புத்தியின் மூல சக்தி அவள் என்று உருவகிப்பதால் அவளின் அருளால் நாம் புத்தியை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகிறது. நாம் பெற வேண்டிய சக்தி எங்கிருக்கிறது? பிரபஞ்சம் எல்லாம் பரவியிருக்கிறது. 

இப்படிப்பரவிய மேதா சக்தி எனக்கு நன்மையை, மங்களத்தை தரக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் அடிப்படையில் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும், பயமுறும் மனிதன் தைரியமாக மேதா சக்தியைப் பெற முனைவான். இறுதியாக அந்த மேதா சக்தி எங்கு வந்து சேர வேண்டும் என்று இலக்கினைக் குறிக்க, அவளை மனதின்/புத்தியின் மூல சக்தி என்று குறிப்பிடுகிறது. 

இப்படி முதல் வரிகளில் மேதா தேவியின் பண்புகளை விபரித்து பிறகு அந்தப் பண்புகளைப் பெற வேண்டிய சாதகன் எப்படி இருக்க வேண்டும், அவன் எதை மேதா தேவி தனக்குத் தர வேண்டும் என்பதைக் கூறுகிறது; மேதா தேவியின் அருள் வேண்டுபவன்

1) பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும்

2) பிரம்மத்தை அடையும் இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும். 

3) வீரமுள்ள மக்கட் செல்வங்களையும் மாணவச் செல்வங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். 

பயனற்ற பேச்சுக் குறைந்தால், பயனற்ற எண்ணங்கள் குறையும், பயனற்ற எண்ணங்கள் குறைந்தால் மனதின் சலனம் குறையும். மனதின் சலனம் குறைந்தால் சித்தத்தின் விருத்தி குறையும். சித்தத்தின் விருத்தி குறைந்தால் சித்தத்தில் (ஆழ் மனதில்) சித் என்ற அறிவு விழிப்படையும். இந்த ஆற்றலே மேதா சக்தி. 

பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும் என்றால் இலக்கு உயர்வாக இருக்க வேண்டும். இலக்கு உயர்வாக இருந்தால் அதை அடைவதற்கே எமது நேரம் செலவாகும். இலக்கு தாழ்வாக இருந்தால் நாம் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதிலும், செயலாற்றாமல் வம்பளப்பதிலும் செலவழித்துக் கொண்டிருப்போம். ஆகவே பரா வித்யாவின் மிக உயர்ந்த இலக்கான பிரம்மத்தை அடைதலை இலக்காக கொண்டவனுக்கே மேதா சக்தி அடையக் கூடியதாக இருக்கும். 

மூன்றாவது வீரமுள்ள மக்கட் செல்வங்களும், மாணவச் செல்வங்களும் இருக்க வேண்டும் ஏன்? உயர்ந்த அறிவைப் பரப்பும் பரம்பரையை உருவாக்கினால் தான் பெற்ற மேதா சக்தியால் உலகம் பயனுறும். ஆகவே மேதா சக்தி பெற்ற ஒருவனுக்கு மக்கட் செல்வங்களும், மாணவர்களும் கட்டாயம் இருந்தால் தான் அந்த மேதைத்துவத்திற்கு விலாசம் ஏற்படும். மக்களும், மாணவர்களும் பெற்றோரைப் போல், ஆசிரியரைப் போல் மேதா சக்தியை பெறக் கூடிய மன ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே வீரமுள்ள மக்கட்  செல்வமும், மாணவச் செல்வமும் என்று கூறப்பட்டது. 

ஒரு மந்திரமுமே இவ்வளவு அழகாக மேதா சக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது, இந்தத் தொகுப்பில் இன்னும் ஐந்து மந்திரங்களுக்கும் விளக்க எழுதுவோம்! 

இதைப் படிப்பவர்கள் எல்லாம் மேதாசக்தி பெற்று குருமண்டலத்தின் மாணவச் செல்வங்கள் ஆக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...