குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 19, 2020

மேதா சக்தி - 02

தமிழ் - சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளிலுமே ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது தரும் பலன், கருத்து, அர்த்தம் இவற்றை அது கட்டாயம் குறித்துக்காட்டும். 

தகுந்த காரணம் இல்லாமல் எந்தச்சொல்லும் பயன்படுத்தப்படுவதில்லை. 

ஆகவே சொற்களுக்கு பொருள் காண நான்கு வகை அர்த்தங்கள் பயன்படுத்தப்படும். 

1) வேர்ச்சொல்

2) பொதுப்பயன்பாட்டு அர்த்தம்

3) விஷேட அர்த்தம்

4) சம்பிரதாய அர்த்தம்

இதன் படி மேதா என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். 

1. வேர்ச் சொல்: மேதா என்றால் முழுமை என்பது சமஸ்க்ருத அடிச் சொல்லின் விளக்கம், ஒன்றைப்பற்றிய முழுமையான அறிவு என்று பொருள்; ஒரு விஷயத்தில் மேதை என்றால் அந்த விஷயத்தில் முழுமையான அறிவு உடையவர் என்று அர்த்தம். 

2. பொதுப் பயன்பாட்டு அர்த்தம்:

ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்கும் ஞாபசக்தியுடையவனை மேதை என்று கூறுவர். அவன் பெரிய மேதாவி என்று கூறுவோமல்லாவா! 

3. விஷேட அர்த்தம்:

இந்தச் சொல் மிக நுணுக்கமாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சொல்லிற்கான பொருள் இங்கு விஷேட அர்த்தம் என்று சொல்லப்படும். இந்த விளக்கப் பிரகாரம்தான் வரும் பதிவுகள் காணப்படும். 

அதுபோல் மஹா நாராயண உபநிஷத்தில் வரும் மேதா சூக்தத்தின் பொருள் காணும் போது அதன் ஆழ்ந்த பொருள் அறிய விஷேட அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். 

4. சம்பிரதாய அர்த்தம்:

அறிவு அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தலை முறையிலும் குருபாரம்பரியமாக சேகரிக்கப்படும். இந்த அறிவு அந்த சம்பிரதாயத்திற்குள் கவனமாக இருக்கும். அனேகமாக தகுதி அற்றவர்களுக்கு உபதேசிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சம்பிரதாயத்திற்குள் தீக்ஷை பெற்றவர்களுக்கு உபதேசிக்கப்படுவது. 

மேதா சூக்தத்திற்கு சம்பிரதாய அர்த்தமும் இருக்கும்.

இந்தப் பதிவுத் தொடர் வாசகர்கள் எந்தளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மேதா சக்தி பற்றிய ஆயுர்வேத, மேதா சூக்த விஷேட அர்த்த அடிப்படையில் விளக்கலாம் என்று எண்ணியுள்ளோம். 

வெறுமனே Like போட்டு விட்டு கடந்து விடுபவர்களுக்காக எழுத முடியாது, ஆர்வமுள்ளவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி Comment இட்டால் அது தரும் தூண்டலில் அடுத்த பதிவு வரும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...