குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதா சக்தி - 07

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் இரண்டாவது மந்திரம்

இந்த மந்திரம் மேதா சக்தியால் ஒருவன் அடைய வேண்டியவற்றைப் பற்றி மனதிற்கு கட்டுரைக்கிறது. கட்டுரைத்தல் என்றால் suggestion என்று அர்த்தம் {பாருங்களேன் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது}

மேதா தேவியை துதிக்கும் சாதகன் எதை அடைவான் என்ற விபரத்தைத் தருகிறது. அவன் அடையக் கூடியவை மூன்று விஷயங்கள்;

1) ரிஷித்தன்மை

2) பிரம்ம ஞானம்

3) செல்வம்

இந்த மூன்றும் மேதா சக்தியை அடைபவனிடம் வந்து சேரும் என்று இரண்டாவது மந்திரம் சொல்கிறது. 

ரிஷி என்றால் உலகைத் துறந்த துறவிகளோ, ஆடைகளால் வேஷமிட்டுத்திரியும் ஆன்மீகவாதிகளோ அல்ல. ரிஷிகள் என்றால் யார் என்பது பற்றி ஸ்ரீ அரவிந்தர் இப்படிக் குறிப்பிடுகிறார். ரிஷிகள் மற்றவர்களுக்கு ஊக்கம் தரக் கூடிய சிந்தனாவாதிகள். அவர்கள் புலன்கள் மூலம் பெறப்படும் பகுத்தறியும் (deductive reasoning) பௌதீக அறிவாளிகள் அல்ல. அவர்களுடைய ஆற்றல் அளவிட முடியாது. அளவிட முடியாத தியானசக்தியின் மூலம் ஆன்ம ஆற்றலும் உள்ளுணர்வும் (Intuitive) பெற்றவர்கள். 

முற்காலத்தில் சமூகத்தை வடிவமைப்பவர்களாக, வழிகாட்டிகளாக, கல்வியாளர்களாக, பண்டிதர்களாக, நீதிமான்களாக, அரசர்களாக இருந்திருக்கிறார்கள். ரிஷிகள் தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டு சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டவர்கள் அல்ல; மனிதகுலம், தாம் வாழும் சமூகத்திற்கு தாம் பெற்ற பிரம்ம ஞானத்தின்படி வழிகாட்டி அவர்களை உயர்த்தும் வல்லமை உள்ளவர்கள். 

ஆகவே ரிஷி என்ற சொல்லை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் பார்த்த நாடகங்களை வைத்துக் கொண்டு ரிஷித் தன்மையைப் புரிய முற்படக் கூடாது. 

ரிஷி என்றால் பிரபஞ்ச உண்மையை நேருக்கு நேராக அறிந்தவர் (த்ருஷ்டா) என்று பொருள். அவர்கள் அறிந்த உண்மைகளை நாம் அனுபவிப்பதற்காக சொற்கள், வார்த்தைகளைத் தகுந்த சந்தஸில் கோர்த்து மந்திரங்களாகத் தந்திருக்கிறார்கள். அந்த மந்திரங்களை உபாசிப்பதால் அவர்கள் பெற்ற அனுபவத்தை எமக்குப் பெறச் செய்பவர்கள் ரிஷிகள்! ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதனை பிரபஞ்சத்திலிருந்து கண்டறிந்த ரிஷி இருப்பார். 

இப்படி உண்மையை நேருக்கு நேர் அறியும் அனுபவத்தால் வருவது பிரம்ம ஞானம். 

இப்படி ரிஷித் தன்மையால் தெளிந்த ஞானம் வாய்க்கும் ஒருவனுக்கு எல்லாச் செல்வமும் வந்து சேரும் என்பது இங்கு பெறப்படுகிறது. 

இவற்றையெல்லாம் நாம் பெற மேதாதேவியின் அருளால் எமக்கு மேதா சக்தி வேண்டும் என்பதை இந்த இரண்டாவது மந்திரம் கூறுகிறது. 

இதைப் படிப்பவர்கள் எல்லோரும் மேதா தேவி அருள் பெற்று ரிஷித் தன்மை, பிரம்ம ஞானம், எல்லாச் செல்வங்களும் பெற குருமண்டலத்தைப் பிரார்த்திப்போமாக!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...