குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 10, 2020

வார்த்தைகளும் உணர்ச்சிகளும்

வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை அறிய முடியாத மனிதர்களுடன் வார்த்தைகளால் உரையாடுவது மிகக் கடினமானது! இறுதியில் தர்க்கத்தில் போய் முடிந்து பகையாகும்! 

ஒரே சொல் பலருக்கு அவரவர் அனுபவத்திற் கேற்ப வெவ்வேறு அக அனுபவங்களை ஏற்படுத்தி பலவித அர்த்தங்களைக் கற்பித்திருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் சரி என்று நினைத்துப் பிரயோகிக்கும் வார்த்தை அவர்களுக்குப் பிழையாகத் தெரியும்! 

எம்மை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரியாமல் அவர்களுக்கு நாம் உதவுகிறோம்; உபதேசிக்கிறோம்; வழிகாட்டுகிறோம்; நன்மை செய்கிறோம் என்று ஏதாவது செய்வதும் தவறாக முடியும். அவரவர் தம்மைச் சிறப்பாக தாமே நினைக்கும் போது நாம் அவர்களுக்கு உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்று நினைப்பது அவர்களை எரிச்சலூட்டும், சங்கடத்திற்குள்ளாக்கும். 

மனிதன் வார்த்தைகளால் தனது உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளவே தன்னைப் பழக்கப்படுத்தியிருக்கிறான். 

கொடுப்பதை வாங்கிக் கொள்ளவும், கூறுவதை ஏற்றுக் கொள்வதுமான மனநிலை இருக்கும் போது மாத்திரமே நாம் உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்பது ஆக்கத்தை உண்டு பண்ணும். 

அப்படி இல்லாவிட்டால் கல்லின் மேல் தெளிக்கும் நீர்ப் போல் இறுகிய மனத்துடன் உரையாடும் போது எண்ணங்கள் தெறித்து விழும்! 

ஆனால் மனிதனாகப் பிறந்த யாரும் பூரணமானவர்கள் இல்லை! அனைவரும் குறைகளுடன் பிறந்து தமது குறைகளைச் செம்மைப்படுத்தவே இந்த வாழ்வு என்ற புரிதலும் மற்றவர்கள் எம்மைச் செம்மைப்படுத்த உதவுகிறார்கள் என்ற புரிந்துணர்வும் எமது வாழ்வை சரியான கோணத்தில் பார்க்க உதவி செய்யும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...