குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதா சக்தி - 08

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் மூன்றாவது நான்காவது மந்திரங்கள். 

இந்த மந்திரங்கள் ஒருவன் பெற வேண்டிய மேதா சக்திகள் எவை, அவற்றிற்கு அதிபதிகள் யார் என்பதைக் கூறுகிறது. 

1) இந்திரன்

2) சரஸ்வதி

3) அஸ்வினி குமாரர்கள்

4) அப்ஸரா

5) கந்தர்வர்கள்

ஆகிய ஐவரிடமிருந்தும் மேதா சக்தியை நாம் பெற வேண்டும் என்று இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. 

இது மேதா சக்தியைப் பற்றிய சில இரகசியங்களைக் கூறுகிறது. இங்கு தேவர்களாகக் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒவ்வொன்றும் மனிதன் பூரண இன்பத்துடன் வாழ்வதற்குத் தேவையான சக்திகள். 

இந்திரன் தெய்வ மனதின் அதிபதி, இந்த தெய்வ மனதிலிருந்தே மனித மனம் தோற்றம் பெறுகிறது. தெய்வ மனதின் அதிபதியுடன் மனித மனம் தொடர்புபட்டால் அந்த மனம் நுணுக்கமான விஷயங்களைப் புரியும் ஆற்றல் பெறும். 

சரஸ்வதி மனம் கற்க வேண்டிய பரா - அபரா வித்தைகளுக்கு அதிபதி. சரஸ்வதியின் அருள் வாய்ப்பதால் ஒருவன் பரா - அபரா வித்தைகளில் நிபுணத்துவம் பெறுவான். 

முதலின் தெய்வமனமாம் இந்திரன் அருள் பெற்று பின்னர் மனித மனம் கொண்டு வித்தைகளைக் கற்க வேண்டும் என்ற சூக்ஷ்மத்தை இந்த மந்திரம் கூறுகிறது. 

அடுத்தது அஸ்வினி குமாரர்கள் - அஸ்வினி குமாரர்கள் ஆயுள் வேதத்தின் அதிபதிகள். எதை உண்ண வேண்டும் என்ற பதார்த்த குண இரகசியத்தையும், உணவை மருந்தாக்கும் இரகசியங்களையும் பெறலாம். இவர்களிடமிருந்து ஒருவன் உணவையும், மருந்தையும் பற்றிய இரகசியங்களை தனது அறிவிற்குச் சேர்த்துக் கொண்டால் அவன் வாழ்க்கை பூரணத்துவம் அடையும். 

அடுத்து அப்ஸரஸ், அப்ஸரஸுகள் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும் மனதை மூளையை ஆற்றலைத் தருபவர்கள். நடனம் இவர்களின் அடிப்படை, அப்ஸரஸுகளின் அமிசம் உள்ளவர்கள் நடனத்தில் சிறந்து விளங்குவர். அப்ஸரஸுகள் உடலை எப்படி யோகத்திற்கு பயன்படுத்துவது என்ற இரகசிய அறிவினைத் தருவார்கள். 

கந்தர்வர்கள் இசைக்கு அதிபதி, ஒருவனுக்கு நாதம், இசையை உணரும் தன்மை பெறுவதற்கு கந்தர்வ அறிவு இருக்க வேண்டும். தலைச் சிறந்த இசை மேதைகள் அனைவரும் கந்தர்வ அமிசமாகவும் கந்தர்வ மேதாசக்தி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த இரண்டு மந்திரங்களும் மேதா சக்தியின் ஐந்து உபசக்திகளைக் குறிக்கிறது. 

1) சரஸ்வதி மேதா சக்தி - பரா அபரா வித்தைகள்

2) இந்திர மேதா சக்தி - தெய்வ மனத்திற்கான அறிவு

3) அஸ்வினி மேதா சக்தி - உணவு, மருந்து பற்றிய ஆயுர்வேத மேதா சக்தி

4) அப்ஸர மேதா சக்தி - நடனம், உடலை ஆளும் ஆற்றல், இன்பத்தை அனுபவிக்கும் சக்தி

5) கந்தர்வ மேதா சக்தி - இசை, நாதத்தை உணரும் சக்தி. 

இந்த ஐந்து சக்திகளின் விரிவு அனேகம், இந்தக் கட்டுரையின் நோக்கம் இவை பற்றிய அறிமுகம் மட்டுமே, ஆகவே இந்த நோக்கத்தைத்தாண்டி இதை நாம் உரையாடப் போவதில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இது பற்றிப் பார்ப்போம். 

மேதா தேவியின் ஐந்து வகை உப மேதா சக்திகள் இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பூரண மேதா சக்தி வேண்டுபவன் இவற்றை படிப்படியாகப் பெறவேண்டும். 

தொடரும்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...