குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 18, 2020

தலைப்பு இல்லை

நேற்றுக் காலை 03:30 இற்கு எழுந்து எமது கையால் சக்கரைப் பூசணிச் சமையல்! பின்னர் பண்ணைக்கு விஜயம்; கறியின் சுவை பற்றி மூவர் Review தருவார்கள்! {Nishānthan Ganeshan Thava Sajitharan & Jenojan Kanthasamy}

பூசணியை சுவையாகச் சமைப்பதில் நுட்பம் இருக்கிறது! அது சமையல் இரகசியம்  அம்மாவுடன் போட்டி போடுவதற்காக இன்னும் அதை தனிப்பட்ட இரகசியமாகவே வைத்திருக்கிறேன். 

பூசணி தாவரங்களில் மிகப்பெரிய காயைத் தரும் தாவரம். இதனால் காய்களில் உயிர் சக்தி (பிராணன்) நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால் சடங்குகளில் உயிர் பலிக்குப் பதிலாக பாவிக்கப்படுகிறது. 

சித்தாயுர் வேதத்தில் பூசணியின் குணத்தை அதன் சுவை, வீரியம், விபாகம் என்ற அடிப்படையில் முத்தோஷங்களிலும், எப்படி தாதுக்களிலும் வேலை செய்யும் என்ற விளக்கத்தை கீழே தருகிறோம். 

இது இயற்கை விவசாயத்தில் விளைந்த சக்கரைப் பூசணி 

பூசணிக்காயின் குணம் பற்றி பதார்த்த குணம் கூறுவது! 

இயற்கை விவசாயத்தில் விளைந்த பூசணி என்றால் நீங்கள் சித்த ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த காலத்தில் உரமும், பீடை கொல்லிகளும் தெளிக்கவில்லை! 


பெரும்பூசனிக் காய்க்குப் பித்தமோடு காய்ச்ச

லருஞ்சார நீர்க்கட் டருமே - மருந்திடுதற்

பித்தசுர மஸ்திசுரம் பேற்வறட்சி மேகமும் போம்

மெத்த வனிலமூறும் விள்


அனலழலை நீக்கு மதிபித்தம் போக்குங்

கனலெனவே வன்பசியைக் காட்டும் - புனலாகு

மிக்கவைய முண்டாக்கு மென் கொடியே யெப்போதுஞ்ச்

சக்கரப் பறங்கிக்காய் தான்

மென் கொடியாளே! 

(எமது அனேக சாஸ்திரங்கள், சிவனார் தனது மனைவியான பார்வதிக்கு உபதேசித்ததாகவே எழுதப்பட்டுள்ளது}


பூசணிக்காய் பித்தத்தைத் தணிக்கும், உட்காய்ச்சல், உடல் சூடு இருந்தால், மூத்திர எரிச்சல் இருந்தால் நீக்கும்.  உடலில் விஷங்கள் இருந்தால் அவற்றை நீக்கும். பித்தம் அதிகரிப்பதால் வரும் காய்ச்சல், எலும்பு தாது வலுவிழப்பதால் வரும் காய்ச்சல், உடல் வரட்சி என்பவை நீங்கும்! 

உடல் சூட்டைக் குறைக்க பூசணி நல்ல மரக்கறி! 

அதைச் சுவையாக சமைத்து - பக்குவமாக்கி உண்பது நோய் தீரும் மருந்து! 

இறுதியாக அறிவியல் பிரியர்களுக்கு, 

health benefits of pumpkin என்று Google செய்யுங்கள்; தேவையான தகவல் கிடைக்கும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...