குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 14, 2020

தற்கொலை

திடீரென முக நூல் பிரபலங்கள் சிலர் தற்கொலை பற்றி பதிவிடுகிறார்கள்; என்ன காரணம் என்று உரையாடினால் அவர்களுடைய நண்பன் ஒருவன் அதுவும் மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற சோகமான செய்தி கிடைத்தது. 

தற்கொலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதற்கு நவீன அறிவியல் உளவியல் பிரச்சனை என்று பல கதைகள் சொல்லும். 

யோக மனவியல் தனது ஆங்காரம் சார்ந்த பிரச்சனை என்று விளக்கம் சொல்லும். ஆங்காரம் என்றால் மனம் உருவாகுவதற்குரிய மையம் (center) என்று பொருள். 

உதாரணமாக நான் மருத்துவன் என்ற ஆங்காரத்தை - மையத்தை உருவாக்கினால் அந்த மையம் சார்ந்து எனது எண்ணங்கள், ஆழ்மனம், புத்தி என்பன உருவாகத் தொடங்கும். இப்படி உருவாகத் தொடங்கியதை மனம் இறுகப் பற்றிக்கொள்ள களிம்பாக ஆணவம் தொற்றிக் கொள்ளும். பிறகு இந்தக் களிம்பினைக் காப்பாற்ற யதார்த்தத்தை மீறி செயல்பட ஆரம்பிக்கும் போது அது வெற்றி பெறவில்லை என்றவுடன் துக்கம் வரும்.

இது social status இனை முதன்மையாகக் கொண்ட சமூகங்களில் வீட்டிற்கொரு வைத்தியர், பொறியியலாளர் உருவாக வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கும் சமூகங்களில் காணலாம். இந்த அழுத்தத்தால் உருவாக்கப்படும் பிம்பத்தை காப்பாற்ற முடியாத போது வேறு என்ன செய்வது என்று தெரியாமல் மனம் ஸ்தம்பித்துப்போய் தற்கொலையாக முடியலாம். 

அடிப்படையில் சந்தோஷமாக வாழ்வது என்பது தான் வாழ்வின் இலக்கு என்று சொல்லிக் கொடுக்காமல், முயற்சிப்பதில் தோல்வி அடைவது இயல்பானது என்பதை சொல்லிக் கொடுக்காமல் போட்டி போடுவதற்கும், தற்பெருமை பேசுவதை, பணச் செருக்கை தம்பட்டம் அடிப்பதை, சாதிச் செருக்கை ஊட்டி வளர்க்கும் சமூகங்களில் இப்படியான ஆணவங்கள் உடைபடும் சந்தர்ப்பங்களில் கொலையும், தற்கொலையும் நடைபெறுவதை அவதானிக்கலாம். 

தாவோயிசத்தின் மூன்று நியதிகளில் ஒன்று வெற்றியின் அபாயம்; அதீத வெற்றி என்பது உச்சி; உச்சிக்குச் சென்றால் விழாமல் இருக்க முடியாது என்பது தான் நியதி. 

இன்று இளைஞர்களிற்கு தேவை அக வாழ்க்கை! மனம் எப்படி இயங்குகிறது? எது உண்மையான வாழ்க்கையின் இலக்கு? இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்ற தெளிவு?

சமூகம் திணித்த வீண் பிம்பங்களுக்காக விலைமதிப்பற்ற உயிரை வீணாக்குவதல்ல!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...