குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதா சக்தி - 03

மேதா என்ற சொல்லின் விஷேஷ அர்த்தம் பற்றி உரையாடுவதானால் ஆயுர்வேதம், மேதா சூக்தம் ஆகிய இரண்டிலும் இந்தச் சொல் பாவிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். 

ஆயுர்வேதத்தின்படி மேதா என்பது அறிவினை சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிவின் ஒரு வகை ஆற்றல் என்றும், சுசுருத சம்ஹிதைப் பிரகாரம் புத்தியின் எந்தப்பகுதி ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரே நேரத்தில் பல விஷயங்களை அவதானித்து, முழுமையாக, தடையில்லாமல், மிக நுணுக்கமாக, ஆழமாக அறிந்துகொள்ளும் புத்தியின் ஆற்றல்களின் ஒன்றே மேதா எனப்படுகிறது. 

அஷ்டாங்க ஹ்ருத்யத்தின் உரை மேதாவை அறியப்படும் பொருளின் அனைத்து அமிசங்களையும் தடையில்லாமல், தெளிவாக அறிந்து அவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் அறிவு எனப்படுகிறது. 

இது எமது புத்தியின் விஷேஷ அமிசம். அனைவராலும் எல்லா விஷயங்களையும் புலன்களால் அறிய முடியும். அதுபற்றி முழுமையான அறிவினைப் பெறுவதற்கு ஒருவனுக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். 

இதை நவீன மூளை - உளவியல் அறிவியலில் புரிந்து கொள்வதானால் Cognition என்று சொல்லப்படும். 

Cognition என்பது ஒருவன் தனது புலன்கள், சிந்திப்பது, ஏற்கனவே பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஆகிய மூன்றின் மூலமும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்/உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனப்படும். 

மனிதனின் இந்த cognition ஆற்றல் 

1) உணர்வுடன் புரிதல்: ஏன் ஒரு விஷயம் நடக்கிறது என்ற தெளிவுடன் நாம் புரிந்துகொள்வது. 

2) உணர்வில்லாமல் புரிதல்: ஏதோ நடக்கிறது, ஆனால் அது ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்ற தகவல் எமது ஞாபகத்தில் இருப்பதில்லை.

3) தெளிவாகப் புரிதல்: ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான புரிதல்

4) சுருக்கமாகப் புரிதல்: கணிதச் சமன்பாடுகள் ஒருவித abstraction 

5) அக உணர்வுடன் புரிதல்: Intuition எனப்படுவது, 

6) மாதிரியுருக்கொண்டு புரிதல்: Model and designs 

என்ற பல நிலைகளில் செயற்படுகிறது. 

மேதா என்பதைப் புரிந்துக் கொள்ள நவீன உளவியல் - மூளை அறிவியலில் Cognition என்ற சொல் பொருந்துகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...