குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 13, 2019

கிருஷ்ணனும் காயாக் கோட்பாடும்

காயாக் கோட்பாடு கூறுவது பூமியின் சமனிலை மாறுபடும் போது அது தன்னை எப்போதும் ஒரு சீர்திட நிலையில் வைத்துக் கொள்கிறது என்பது. 
சம நிலையை குலைக்கும் செயல்களை எதிர்மறை பின்னூட்டம் (Negative feedback) என்றும் சரிப்படுத்தும் செயலை நேர்மறை பின்னூட்டம் (Positive feedback) என்றும் குறிப்பிடுகிறார். 
இதனை இந்த கோட்பாட்டினைக் கூறிய விஞ்ஞானி கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்பமாற்ற அளவின் மூலம் உய்த்தறிந்துள்ளார். 
இப்படி பூமி தனது எதிர்மறை பின்னூட்டங்களை சமப்படுத்தி பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயலையே Gaia என்று குறிப்படுகிறார். 
Gaia defined as a complex entity involving the earth's biosphere, atmosphere, oceans, and soil; the totality constituting a feedback or cybernetic system which seeks an optimal physical and chemical condition of life on this planet.
இனி சுவாரசியம் என்னவென்றால் கிருஷ்ணன் பகவத் கீதையிலும் இப்படி ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
தர்மம் என்பது ஒழுங்கு, சம்ஸ்க்ருதத்தின் அதன் சரியான பொருள் அச்சில் சுழலுவதற்கு பிணைக்கும் அச்சாணி அல்லது செயல் என்று பொருள். அதாவது positive feedback என்று பொருள். அதர்மம் என்றால் ஒழுங்கைக் குலைக்கும் செயல் என்று பொருள். அதாவது negative feedback என்று பொருள். 
இனி கீதையில் கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம். 
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைவு ஏற்பட்டு அதர்மத்தின் ஆதிக்கம் ஏற்படுகிறதோ, அச்சமயத்தில் நான் சுயமாகத் தோன்றுகிறேன். Gaia will establish the homeostasis. 
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
நல்லவற்றைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம் தோறும் தோன்றுகிறேன். 
ஆக ஒழுங்கு கெடும் போது இயற்கை தன்னைத் தானே ஒழுங்குபடுத்தி சம நிலைப்படுத்த எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையினை வைத்திருக்கிறது என்பதே இதன் அடிப்படை! 
ஆக இயற்கை தன் கடமையைச் செய்யும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...