குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்தின் ஒளி - 03


ஸம்பளா பற்றிய நூற்குறிப்புகள் பெரும்பாலும் திபேத்தியப் பௌத்த நூற்களிலேயே நம்பக்கூடிய மகிமை வாய்ந்த தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த திபேத்திய நம்பிக்கைக்கு ஒத்த விஷயங்கள் மற்றைய கலாச்சாரங்களிலும் காணக்கிடைக்கின்றது.

இயல்பாக எழக்கூடிய முதலாவது கேள்வி ஸம்பளா என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதே. “ஸம்” என்றால் சமஸ்க்ருதத்தில் அமைதி அல்லது சாந்தி என்று அர்த்தம். புராணங்களில் ஸம்பளத் தீவு பற்றிய வர்ணனைகள் கிடைக்கின்றது. அந்த தீவில் அம்ருத வாவி இருப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. திபேத்திய பௌத்த நூற்களில் ஸம்பளாவைப்பற்றிய குறிப்புகள் பல பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு முந்திய இரண்டாயிரம் வருங்கள் பழமையான Bon மதப்புத்தகங்களிலும் ஸம்பளா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. Bon மதப்புத்தகங்களில் ஸம்பளாவை அடைவதற்கான வரைபடங்களும் கிடைக்கின்றது.

அறு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்பளாவில் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி ஒவ்வொரு நூற்றாண்டின் முடிவிலும் உலக அமைதிக்கும் ஒற்றுமைக்குமாக ஸம்பள யோகிகள் பூமியில் செயல்பட வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

உலக அமைதிக்கும் ஸாந்திக்குமாக பாடும் ஆன்மீகர்கள் அனைவரும் இந்தத்திட்டத்தில் ஒருபடியாகவே தமது பணிகளைச் செய்கிறார்கள். ஸம்பள யோகிகளின் நோக்கம் உலகைச் சூழ உள்ள ஆகாச ஏட்டில் இருக்கும் நல்ல உணர்வுகளை அதிகரித்து பூமியில் மனித குலம் தெய்வ நிலை அடையும் சந்தர்ப்பத்தை அதிகரித்து தெய்வ குணமுள்ள மனித குலத்தை ஏற்படுத்துவதாகும்.

அடுத்து ஸம்பளா பற்றி ஆன்ட்ரூ தோமஸ் அவர்கள் தமது அறிமுகத்தில் கூறியவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

அந்த நூலின் நோக்கமாக பூலோகத்தில் பிரபஞ்ச ஒளிமிகுந்த ஒரு கலாச்சாரத்தை தெரிவிப்பதற்குரிய ஒரு வழிகாட்டி நட்சத்திரம் என வர்ணிக்கிறார். பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தமது அறிவிலும், பண்பிலும் முன்னேறி, புரிதலை மேம்படுத்தி, உயர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அனைத்து மனிதர்களும் சகோதரத்துவத்துடன் பழகுவதற்குரிய பண்பினை உருவாக்குவதற்குரிய புரிதலை வழங்குவதற்காக என்று கூறுகிறார்.

உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையை உண்மை என்று உடனே புரிந்துகொள்பவர்கள் ஒரு வகை, மற்றவர்கள் உண்மை என்பதை இறுதியில் புரிந்துகொள்வார்கள்.

உலகம் உருண்டை என்பதை பலவருடங்களாக ஏற்றுக்கோள்ள மறுத்தவர்கள் சோவியத் ரஷ்டா ஸ்புட்னிக் விணகலத்தின் மூலம் எடுத்த படங்களைக் கோண்டு உருண்டை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் அதற்கு பல காலத்திற்கு முன்னரே உலகம் உருண்டை என்பதை அறிந்தவரகள் இருக்கத்தான் செய்தார்கள்.

இதைப்போல மனித குலத்தின் ஆன்ம பரிணாமத்தை ஒரு இரகசிய உயர் ஆன்ம சக்தியுள்ள குழு வழி நடாத்திவருகிறது என்பதை நம்ப மறுக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் இது உண்மை என்று தெரியும் போது அனைவரும்  ஏற்றுக்கொள்வார்கள்.  ஆகவே இந்த அடிப்படையில் ஸம்பளா பற்றி படிக்கத்தொடங்குங்கள் என்கிறார்.   

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...