குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 02

1957 ம் ஆண்டளவில் எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தான் வேலை செய்த கம்பனியின் சார்பாக ஏற்பட்ட வழக்கு ஒன்றிற்காக திருச்சியில் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று சிறிது காலம் என்பதால் ஆங்கிலேயக்கம்பனியின் வழக்கு திருச்சி நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குறித்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணக்கு வழக்குகள் சுவாமிகளில் கைகளால் எழுதப்பட்டது என்பதால் சாட்சிக்கு சுவாமிகள் பங்குபற்றச்சொல்லில் சில மாதங்கள் திருச்சியில் தங்கச் சொல்லிவிட்டார்கள். 

திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் ராமானுஜர் சன்னதியில் நின்றுகொண்டு இருக்கும் போது தனது சிறுவயதில் தன்னைச் சந்தித்து விநாயகர் கவசம் கொடுத்த அதே பெரியவர் அவரை என்னைத்தெரியுமாடா உனக்கு? என்று கேட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுக்க சுவாமிகள் நினைவிழந்து போய்விடுகிறார்.  மீண்டும் பார்க்க அடந்த வனத்திற்குள் இருப்பதை உணர்ந்து எழுந்து பார்க்க அதே பெரியவர் மாட்டிக்கொண்டாயா? என்று கேட்டுவிட்டு மறைந்து விட காட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். சிறிது தூரம் நடக்கும் போது வனவாசிகளிடன் மாட்டிக்கொள்ள அவர்கள் ஈட்டியும் அம்பும் எறிய ஓடிச் சென்று ஆற்றில் குதித்தவருக்கு அதன் பிறகு நடந்த எதுவும் தெரியவில்லை. 

நினைவு திரும்பிய போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பர்ணசாலையில் இருப்பதை உணர்ந்து எழுந்த போது, தன்னுடைய உடலில் தழும்புகளும், காயங்கள் முற்றாக மாறி இருப்பதை உணர்ந்தார். அங்கு பல மேல் நாட்டவர்களும், மற்றும் சிலரும் தியானத்தில் இருப்பதையும் எழுந்து அவதானிக்க அவர்களுக்கு குருவாக இருந்த தெய்வீகக் களை பொருந்திய ஒருவர் சுவாமிகளை புன்னகையுடன் "உனது குரு கண்ணைய யோகி, மதராஸில் அம்பத்தூரில் இருக்கிறார், சென்று சந்திப்பாய்" என்று கூறி விட்டு தன்னுடைய இரண்டு சீடர்களை அழைந்து இவர் குணமாகிவிட்டார் அழைத்துச் சென்று விட்டுவாருங்கள் எனக்கூறிவிட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கப் போய் விட சீடர்கள் அழைத்து வந்து  பணமும் கொடுத்து ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர். அது நீலகிரி ரயில் நிலையம் என்று சுவாமிகள் சொல்லுவார்கள். 

சுவாமிகள் நேர மதராஸ் வந்து, அம்பத்தூர் சென்று கண்ணைய யோகியாரைத் தேடிச் சென்றபோது அங்கு ஒரு பெரியவர் சிறு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கடையோரமாக இருக்க அவரிடம் சுவாமிகள் சென்று கண்ணைய யோகியாரின் வீடு எங்கிருக்கிறார்? என்று கேட்க, அந்தப்பெரியவர் கண்ணைய யோகி என்று ஒருவரும் இல்லை, கண்ணைய நாயுடு என்று ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கூறி வழிகாட்ட இவரும் அங்கு செல்ல வீட்டினுள்ளே நாலைந்து  நபர்கள் ஏதோ கற்பதற்கு வந்தவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கடையில் இருந்த பெரியவர் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு உள்ளே வர அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். அவர்தான் கண்ணைய யோகி என்பது சுவாமிகளுக்கு புரிந்துகொண்டு அவரும் வணங்கினார். பின்னர் யோக வகுப்புகள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு மேலை நாட்டு நபர் ஒருவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் கண்ணைய யோகியாரிடம் மாணவராக கற்கும் படி ஸம்பளா எனும் ஆசிரமத்திலிருந்து ரிஷிகளால் அனுப்பப் பட்டவர் என்பதை பின்னர் சுவாமிகளுக்கு கண்ணைய யோகியார் கடிதம் மூலம் கூறியிருந்தார். 

அந்த மேலை நாட்டவர்தான் உலகத்திற்கு ஸம்பளா எனும் சூக்ஷம் ஆசிரமம் பற்றி எழுதிய ஆண்ட்ரூ தோமஸ் என்பவர். இந்த ஆண்ட்ரூ தோமஸ் Shambhala Oasis of Light எனும் நூலை எழுதியிருந்தார். 

ஆண்ட்ரூ தோமஸும், எனது குருநாதரும் ஒரே நாளில் ஸ்ரீ கண்ணைய யோகியாரை சந்தித்தார்கள் என்பது எனது குரு நாதருக்கு வழிகாட்டல் நீலகிரி மலைச்சாரலில் உள்ள சூக்ஷ்ம ஆசிரமத்திலிருந்தும், ஆன்ட்ரூ தோமஸிற்குரிய வழிகாட்டல் ஸம்பளா ஆசிரமத்திலிருந்தும் கிடைத்தது என்பது முக்கிய செய்தி. 

பின்னர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆன்ட்ரூ தோமஸிற்கு ஆங்கிலத்தில் Sidhman course என்றும் எனது குரு நாதரிற்கு சித்தி மனிதன் பயிற்சி என்றும் பாடத்தொகுப்பு எழுதிக் கற்பித்தார். இந்த சித்தி மனிதன் பயிற்சி என்பது ஒரு மனிதன் தனது அந்தக்கரணங்களை எப்படி வலுப்படுத்தி சித்திகளை அடைவது என்பதற்கான பயிற்சியாகும். 

 நாம் குரு நாதரிடம் இந்த சித்தி மனிதன் பயிற்சிப்பாடங்களைப் பயிலும் போது ஆண்ட்ரூ தோமஸ் பற்றி சுவாமிகள் அடிக்கடி கூறுவார்கள். மிக உயர்ந்த மனப்பிராண ஆற்றல் பெற்று ஸம்பளாவின் ரிஷிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று அடிக்கடி கூறுவார். 

அவர் எழுதிய நூற்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவருடைய Shambhala Oasis of Light நூலிலுள்ள விஷயங்களைப் பற்றி இந்தக்கட்டுரைத் தொடரில் உரையாடுவோம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...