குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 22, 2019

சாதனையின் படிமுறைகளை எனக்கு விருப்பமான படி மாற்றிக்கொள்ள முடியுமா?

அண்மையில் ஒரு சாதகர் குரு அகத்திய காயத்ரி சாதனையின் அனைத்துப் படிகளையும் தன்னால் மனவிருப்புடன் செய்ய முடியவில்லை, மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அகத்தியர் மூல குரு மந்திரமும், காயத்ரியும் மாத்திரம் தினசரி சாதகம் செய்து வருகிறேன், இது சரியா? என்று கேட்டிருந்தார்.

சாதனையை தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மனம் எம்முடன் ஒத்துழைக்கும் விஷயத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது எந்த விஷயத்திலும் நாம் நீண்டகால ஈடுபாட்டுடன் செய்வதற்கு மிக அத்தியாவசியமான நிபந்தனை. ஆகவே தற்போதைய நிலையில் தாங்கள் சரி!

ஆனால் மனதினையும் சித்தத்தினையும் பரிபூரணமாகச் சுத்தி செய்து தெய்வ உருமாற்றம் விரும்பினால் மனம் போன வழியில் சென்று குருகாட்டிய வழியிற்கு தடம் மாறவேண்டும்.

சாதனை முறை என்பது ஒரு Process, பயணத்தின் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் நாம் பயண ஒழுங்கினைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் முழு அனுபவமும் கிடைக்காது.

ஆகவே குறித்த இரண்டு மந்திரங்கள் மாத்திரம் எனக்குப் போதும் என்று நினைத்தால் அந்த அனுபவங்களுக்குள் எம்மை மட்டுப்படுத்திக்க்கொள்கிறோம்.

மனிதன் அடிப்படையில் சலனிக்கும் மனமும், சித்தமும் உடையவன், அவன் தனது இயல்புடன் தன்னை உருமாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு தன்னை விட ஒரு உயரிய சக்தியும் அந்த சக்திக்கான பாதையைக் காட்டும் படிகட்டுகளும் தேவை, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சித்த வித்யா குருமண்டல நாமாவளி.

பின்னர் அகத்தினை ஈசனாக்கும் வழியை இணைக்கும் மூல குரு மந்திரம்.

மனம் நாம் எதற்காக இந்த சாதனையைச் செய்கிறோம் என்ற எண்ணத்தினைக் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அற்ப காரணங்களாக அல்லாமல் எமது இறுதி இலட்ச்சியத்தித்திற்கு வழிகாட்டும் சங்கல்பமாக இருக்கவேண்டும். அதற்காக காயத்ரி சங்கல்பம்

பின்னர் மனதினை கூர்மையாக்கி ஒருமைப்படுத்தி மனதினை புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியுடன் இணைக்கும் காயத்ரி மந்திரம், இது பிராணசக்தியை எம்மில் அதிகரிக்கும்.

இப்படி அதிகரித்த சக்தியை எம்மில் தெய்வ உருமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டளைகளை எமது ஆழ்மனமாகிய சித்தத்திற்கு தரும் சாதனை சித்த சாதனை.

இறுதியாக எமது உலக வாழ்வு இன்பமாக இருப்பதற்குத் தேவையான பதினாறு பேறுகளையும் பெற துதி.

இப்படிச் செய்யப்படும் சாதனை ஒருவனை இந்தப் பிரபஞ்சத்தின் உயர் ஞான நிலையில் இருக்கும் குருமண்டலத்துடன் இணைத்து, சாதனையைச் சரியாகச் செய்யக்கூடிய வல்லமையை சாதகனில் உண்டாக்கி, அவனது அந்தக்கரணங்களைச் சுத்தி செய்து தெய்வ குணங்களால் நிரப்பத்தொடங்கும்.

ஆகவே இவற்றைச் சிந்தித்து இந்த process இனை பின்பற்றுவதால் உங்கள் பயணம் இலகுவாகும் என்பதை உங்கள் மனதிற்கு உணர்த்தினால் மனம் அதை ஏற்றுக்கொண்டு சாதனையை முழுமையாகச் செய்ய ஒத்துழைக்கும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...