குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 07, 2019

கொழும்பு வளி மாசும் டெல்லியும்

The problem is we don't know what the climate is doing, We though we knew 20 years ago. that led to some alarmist books - mine included - because it looked clear cut, but it hasn't happened.

- James Lovelock - 

Earth System Scientist

இன்று 06/11/2019 கொழும்பும் சுற்றுப்புறமும் வளி மாசடைதல் உயர்வாக காணப்பட்டுள்ளது. 

எல்லாவற்றிற்கும் காரணம் உடனடியாக டெல்லியும் மோடியும் என்ற தமிழ் நாட்டுப் பாணியில் இங்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இதனை அறிவித்த இலங்கை கட்டிடங்கள் திணைக்கள ஆய்வாளர் டெல்லி மாசு காரணமாக இருக்கலாம் என்று ஊகம் வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையான ஒரு கூற்று. 

டெல்லியில் இருந்து கொழும்பிற்கு வளி மாசு வருவதற்குரிய காற்றுப் பாதை எதுவுமில்லை. தற்போதைய காற்றுச் சுழற்சி அரபிக் கடலில் இருந்து வந்து இலங்கையைக் கடந்து வங்காள விரிகுடாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறது. படம் பார்த்துப் புரிக. 

அமெரிக்க தூதுவராலய கண்காணிப்பின் படி வளிமாசடைதல் சுட்டெண் (Air Quality Index - USA) பிரகாரம் 187 எண்ணை அதிகபட்சம் அடைந்து தற்போது குறைந்து வருகிறது. 

வளிமாசடைதல் சுட்டெண் என்பது ஐந்து காரணிகளை அளவீடு செய்து மதிப்பிடுவது. 

1) Ground-level ozone, 

2) Particulate matter, (PM 2.5 & PM 10)

3) Carbon monoxide, 

4) Sulfur dioxide, and 

5) Nitrogen dioxide

இவற்றுள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக காணப்படுவது PM - 2.5 எனப்படும் நுண் துணிக்கைகள். இதன் அர்த்தம் வளியில் காணப்படும் துணிக்கைகளின் அளவு 2.5 மைக்ரோ மீற்றருக்கு (μm) குறைவான அளவில் உள்ள துணிக்கைகள் அதிகரித்துள்ளன. 

இந்த துணிக்கைகளுக்குரிய மிக அதிக பங்களிப்பாளர்கள் மணல், கனிமத் துணிக்கைகள்!

இரண்டாவது பெரிய பங்களிப்பாளர் கடல் காற்றிலிருக்கும் உப்பு! இதிலிருந்து magnesium, sulfate, calcium, potassium போன்றவை இருக்கலாம். 

ஆக இலங்கையிற்கான சாத்தியம் கடல் உப்பிலிருந்து வந்திருக்கலாம். மழை காலம் கடலிலிருந்து வரும் நீர் உப்பினைக் கொண்டு வரும்.

இவ்வளவு காலமும் இல்லாத மாசு இப்போது ஏன் வர வேண்டும் என்ற கேள்விக்கு எனது அனுமானம் கடலிலிருந்து வரும் காற்றை மறித்து கொழும்பிற்குள் காற்றைச் சுற்றவிடும் வானுயர்ந்த கோபுரங்களும் கட்டிடங்களும் தான்! 

முன்னர் கடலிலிருந்து எழும் காற்று கொழும்பைத் தாண்டி அப்படியே மலை நாட்டில் வந்து தாக்கி தனது உப்பைக் கொட்டிக் கொண்டிருந்த காற்றை மறித்து கொழும்பிலே கொட்டும் காரியத்தை இனிமேல் இந்தக் கட்டிடங்கள் செய்யும்! 

கட்டிடம் கூடக் கூட இந்தப் பிரச்சனை கூடத்தான் போகிறது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...