குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 24, 2019

தலைப்பு இல்லை

இன்று Dr. Hegde இன் உரைகளைக் கேட்கும் போது அவர் சொல்லுவதையெல்லாம் அகத்திய மகரிஷி தனது வைத்திய காவிய 2000 இல் வைத்தியன் இலக்கணத்தில் கூறியுள்ளார். இது பற்றி நான் எழுதிய பாடலின் உரை வருமாறு;
அகத்தியர் வைத்திய காவியப்படி 
வைத்தியன் இலக்கணம்
***********************************
பார்தனில் வேதந்தன்னை பார்த்ததில் பெரியோன் சொன்ன
சீர்பெரு வாகடத்தை செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரையு முடன் பிறப்பா மென்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையோனாக
மெய்யது சொல்வோனாக வினங்குகுரு மறவோனாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன தீர்க்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே (௧௩)
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள் கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலா னவைக ளுள்ளான் செகமதி லிருக்க மட்டு
மேதினி யதனில்காலன் விதியல்லால் வியாதியுண்டோ
சினவெறி யேறு போலத் திடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமென வுயிரைக் காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளா னேத்தமுள்ளா னேற்கையால் தோற்ற முள்ளான்
மனமதில் தயவுள்ளான் வைத்தியனாகு மென்றே (௧௪)
பொருள்: அகத்தியர் வைத்திய காவியத்தில் வைத்தியன் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்ற இலட்சணம் கூறப்படுகிறது.
தான் சொன்ன சொல் மாறக் கூடாது.
தன் மனைவி தவிர்ந்த வேறு பெண்களை தன் உடன் பிறந்தவளாக கருதவேண்டும்.
பொய் பேசக்கூடாது
யாவரும் புகழக்கூடிய அறிவினை பெற்றிருத்தல் வேண்டும்
உண்மை பேசுவோனாக இருத்தல் வேண்டும்
குருவை மறவாதவனாக இருத்தல் வேண்டும்
மனதில் இரக்க குணமும் தாட்சண்யமும் நிறைந்தவனாக இருத்தல் வேண்டும்
மனதில் தீர்க்கமான தெளிவுடையவனாய், 
செய்யும் செயல்களில் பாவம் செய்யாதவனாக நன்மையினை நாடியே தனது செயல்களை செய்வோனாக
வைத்திய சாத்திரத்தை நன்றாக கற்று மாதம் தோறும் அதனை மீண்டும் தனது அறிவினை செப்பனிட்டவனான, அதில் கூறிய விடயங்களின் பொருளை தெளிவாக அறிந்தவனாக
தீமைகளை அகற்றியவனாக இருக்கும் வைத்தியனுக்கு காலனால் விதிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்ந்து உயிர் நீக்குவானே அன்றி வியாதிகளால் உயிர் பிரியாது.
மனதிலும் உடலிலும் சினம் கொண்ட சிங்கம்போல் வலிமையுடன் திடசித்தமாக இருப்பவனாக
நோயுற்ற உயிரை கருணையுடன் காப்பவனாக
நல்லொழுக்கம் உடைய குடும்பத்தில் பிறந்தவனாக
நல்ல வசீகரிக்கும் தோற்றம் உள்ளவனாக
மனதில் தயை உடையவனாக ஒரு வைத்தியன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...