குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 01

Image result for SHambala

வைகாசிப்பௌர்ணமி என்பது எமது குருபரம்பரைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இப்படியான ஒரு பௌர்ணமியில்தான் எனக்கும் எனது தாயாருக்கும் குருநாதர் தீக்ஷை தந்தார். 

வைகாசிப் பௌர்ணமியின் சிறப்பு என்னவென்பது பற்றி குருநாதர் தெளிவாகக் கூறியிருந்தார். 

மனிதகுலத்தில் உதித்து ஒளிசரீரம் பெற்ற மகரிஷிகள் பூலோகத்தின் ஹிமாலயத்தின் மிக உட்பகுதியில் அதீத தவ ஆற்றலால் சாதாரண மக்கள் நெருங்கமுடியாதபடி உலகின் பரிணாமம் இறைவனை நோக்கி தெய்வகுணத்துடன் நெருங்குவதற்கு தேவையான சக்தியை, அறிவினை, ஞானத்தினை பூவுலகிற்கு கொடுப்பதற்காக நீண்ட தபஸில் இருந்துகொண்டு, காலத்திற்கு காலம் தகுந்த பக்குவம் பெற்ற மனித உடலில் இருக்கும் ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து உலகின் பரிணாமத்தை உயர்விக்க தகுந்த சாதனை செய்விக்கிறார்கள், அல்லது சிலரிற்கு தமது சக்தியைக் கொடுத்து அவர்கள் உணர்வினை மேம்படுத்தி பலரையும் அந்த அருள் வட்டத்திற்குள் கோண்டுவந்து உணர்வினை மேம்படுத்தச் செய்கிறார்கள். இப்படி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் செயல்கொள்கிறார்கள். 

இதில் தென் நாட்டின் ஆன்ம பரிணாமத்தைத் தீர்மானிக்கும் தலைமை ரிஷி ஸ்ரீ அகத்திய மாமகரிஷியாவார். நீலகிரிமலைச் சாரலில் உள்ள அவரின் சூக்ஷ்ம ஆஸ்ரமத்தில் தகுந்த ஆன்மாக்கள் ஆன்ம பரிணாமத்திற்காக (evolution of consciousnesses) பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எமது குருபரம்பரை அகத்தியமகரிஷியிடமிருந்து வழிகாட்டல் பெற்று வருகிறது.  வைகாசிப் பௌர்ணமி தினத்தில் அனைத்து ரிஷிகளும் இந்த ஸம்பளா என்ற இடத்தில் கூடி தங்கள் ஆற்றல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி முடிவெடுக்கிறார்கள். இதனைப் பற்றி குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் மகரிஷிகளின் மர்ம வாசம் என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். 

இப்படி மனிதகுலத்தின் உணர்வினை (consciousnesses) உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு மகரிஷிகள் காலம் காலமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

பூமியைச் சூழ ஆகாச தத்துவத்தில் மனிதகுலம் தோன்றியது முதல் உருவாகிய எண்ணங்கள் அனைத்தும் அழியாமல் சேமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் தீய எண்ணப்பிரபாவங்கள், நல்ல எண்ணப்பிரபாவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தீய எண்ணப்பிரபாவங்களின் அளவு சிறிதாக இருந்தாலும் அவை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதுவரை உலகில் நடைபெற்ற போர்களும், ஓலங்களும், துன்பங்களும், வன்முறைகளும் இங்கு பதியப்பட்டு அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்பட்ட எண்ணங்கள் எதுவும் ஆகாசத்தில் இருக்கும் பதிவுகள் எதையும் அழிக்க முடியாது.  நல்ல எண்ண அதிர்வுகளால் சமப்படுத்த மாத்திரமே முடியும். இதைச் சாதிப்பதற்கு மனிதகுலத்தினால் மாத்திரமே முடியும் என்பதால் மனிதகுலத்தின் உணர்வினை தெய்வ குணத்திற்கு உயர்த்தி இந்த தீய எண்ண அதிர்வினை சமப்படுத்த முடியும். இப்படி சமப்படுத்துவதற்குரிய நல்ல அதிர்வினை ஏற்படுத்த பூமியில் வாழும் மனிதர்களின் உணர்வு தெய்வ உணர்வாக (Divine consciousnesses) இருப்பதற்காக காலம் காலமாக ஸம்பளாவில் இருக்கும் மகரிஷிகள் செயல்கொண்டு வருகிறார்கள். 

பூலோகத்தின் மனிதனின் உணர்வினை மேம்படுத்தும் அந்த ஒளி ஸம்பளாவில் உள்ள மகரிஷிகளின் வழி மனித குலத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. 

திபேத்திய மொழியில் ஸம்பளா எனவும் பாரத புராணங்களில் ஸித்தாஸ்ரமம் என்றும் சீன மொழியில் ஷங்ரிலா எனவும் அழைக்கப்படுகிறது. 

எமது சித்த வித்யா குருமண்டல  நாமாவளியில் துதிக்கும் குருமார்கள் அனைவரும் இந்த ஸம்பளா எனும் ஒளி மண்டலத்தைச் சார்ந்தவர்களே. 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...