குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 13, 2019

காயத்ரி சாதனையும் புத்துணர்ச்சியும்

காயத்ரி சாதனை என்பது பிராண சாதனை. மூச்சை அடக்கி பிராணாயாமம் எதுவும் செய்யத்தேவையில்லை. சீரான நீண்டகால காயத்ரி சாதனையில் மனச் சலனம் அடங்குவதால் பிராண சேமிப்பு உண்டாகும். சரியான ஒழுக்கத்துடன், மன அடக்கத்துடன் காயத்ரி சாதனை செய்பவர்கள் உடலிலுள்ள நோய்கள் குறைந்து குணமாகும்.
ஆரோக்கியமானவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பலர் காயத்ரி சாதனயால் வரும் புதுச்சக்தியை தம்மில் சேமிக்காமல் அதிகமான உடலுழைப்பு, பணம் சேர்த்தல் போன்றவற்றிற்கு செலவழித்து தமது சக்தியை இழந்து விடுவார்கள்.
கடன்வாங்கி வியாபரம் செய்த ஒருவன் காயத்ரி சாதனையால் தனது கடன் தீர்ந்தவுடன் தனது கர்மா தீர்ந்தது என்று ஞானத்துடன் அதற்குப் பிறகு கடனே வாங்கக்கூடாது என்று எண்ணம் கொண்டு தனக்கு அமைந்த வியாபாரத்தை சிறப்பாகச் செய்ய சிறந்து முன்னேறுவான். அப்படியில்லாமல் எம்மிடம்தானே காயத்ரி சாதனை இருக்கிறது, இன்னும் பல இலட்சம் கடன்வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்தால் சாதனை காப்பாற்றும் என்று பேராசைப் பட்டு செய்யப்போனால் பிரபஞ்ச ஞானசக்தி அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்து ஞானத்தை விழிப்பிக்கும். இந்தப்பாதை மிகக் கடினமானது. ஆகவே புத்தியுள்ள சாதகர்கள் தமது சாதனையில் வரும் சக்தியை அதிகமாக வீணாக்காமல் தம்மை பண்பிலும், குணமாற்றத்திலும் தெய்வ் உருப் பெற பயன்படுத்த வேண்டும்.
இதைப்போல் காயத்ரி சாதனை செய்யும் பிராண பலம் உள்ளவர்கள் இரவில் நித்திரை முழித்தாலும் அடுத்த நாள் உற்சாகமாக செயலாற்றும் வல்லமை இருக்கும். இப்படி இருப்பது ஒரு தற்காலிக நிலையே. ஸ்தூல உடல் இயற்கைக்கு கட்டுப்பட்டது. அது இரவில் ஓய்வெடுப்பதற்கும் படைக்கப்பட்டுள்ளது. ஒழுங்காகத் தூங்காமல் அதிக பிராணசக்தியால் உடலை களைப்படையச் செய்யாமல் வைத்திருந்தால் உடல் வலுவிழப்பது உணர்விற்குத் தெரியாமல் உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும்.
ஆகவே சாதகர்கள் தமது சாதனையால் அதிக பிராண சக்தி பெற்றாலும் அதை இயற்கைக்கு எதிரான வழியில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...