குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 31, 2023

வசந்த நவராத்ரி பூர்த்தி

இன்று வசந்த நவராத்ரி பூர்த்தி - தசமி திதி! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள காலம் தேவி உபாசனைக்கு உகந்த நவராத்ரி காலம்! 
தேவி உபாசனை என்பது இயற்கையாகப் பரிணமித்திருக்கும் அந்த அன்னையின் ஆற்றலை எம்முள் செம்மைப்படுத்தும் ஒரு சாதனை. 
இதில் எமது உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திச் செம்மைப்படுத்த ஸ்ரீ காயத்ரி உபாசனை அதி சிறந்த முறை. 
இந்த சாதனையில் பல படிகள் உள்ளன. முதல் படி சலனிக்கும் மனதைத் தூய்மைப்படுத்தி, புத்தியைப்பலப்படுத்தி, மனதை ஏகாக்கிரப்படுத்தி ஓடிக்கொண்டு, சலனித்துக் கொண்டிருக்கும் மனத்தை ஏகாக்கிரப்படுத்துவது. இதை எளிமையாகச் சாதிக்கும் முறை லகு அனுஷ்டானம் என்பது. 
இந்தச் சாதனையைக் குறிக்கும் வடிவம் ஏக முக காயத்ரி, படத்தில் தேவி சலனித்துக்கொண்டிருக்கும் அலை கடலில் ஹம்ஸ வாகனத்தில் இரு கரங்களுடன் அழகிய பெண்ணாக இருக்கிறாள். 
அலைகடல் - சித்த விருத்தி நிறைந்த மனம்
ஹம்ஸம் - காயத்ரி சாதனையால் தூய்மையுற்ற மனம்
தேவி - தூய்மையுற்ற சாதகனின் மனதில் வந்து அமரும் தெய்வ சக்தி
கமண்டலம் - அலைகள் நீங்கி அடக்கப்பட்ட மனம் 
புத்தகம் - கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதலாம் வரும் அறிவு, புத்தி! 
குழம்பிய மனதுடன் காயத்ரி சாதனை ஆரம்பிக்கும் ஒருவன் தெளிந்த அடங்கிய தூய்மையான மனதினைப் பெற்று அந்த மனதில் அன்னையில் ஒளி ஒளிரப் பெறுவான். அவன் புத்தி தெளிவுறும் என்பது இந்த உருவத்தின் விளக்கம்! 
பலர் இந்த வசந்த நவராத்ரியில் காயத்ரி அனுஷ்டானம் செய்திருக்கிறார்கள். அனுபவத்தைப் பகிர்வார்கள் என்று நம்புகிறேன்.
Para meus alunos de língua portuguesa 
__________________________________________
Vasant Navratri é cumprido hoje - Dasami Tithi! Todos os meses, desde o final de Amavas e o início de Pratham até Navami, é a hora da Deusa Upasana.
Devi Upasana é um ato de refinar o poder da Mãe que evoluiu naturalmente dentro de nós.
Sri Gayatri Upasana é a melhor maneira de melhorar nosso corpo, mente e prana.
Existem várias etapas envolvidas nessa conquista; O primeiro passo é purificar a mente errante, fortalecer o intelecto, concentrar a mente, fugir e concentrar a mente errante. Uma maneira simples de conseguir isso é Lagu Anushtanam.
A forma que representa essa conquista é Eka Mukha Gayatri; Na foto, Devi é uma linda mulher com dois braços no veículo Hamsa nas ondas do oceano.
Oceano - Uma mente cheia de Siddha Vridhi
Hamsam – Uma mente purificada pelo feito Gayatri
Devi - O poder divino que vem e reside na mente de um devoto puro
Kamandalam - Mente subjugada por ondas
Livro - aprender, ouvir, pensar, conhecimento que pode ser esclarecido, sabedoria!
Aquele que começa a façanha Gayatri com uma mente confusa alcançará uma mente clara e pura e nessa mente a luz brilhará na Mãe. A interpretação dessa imagem é que ele será iluminado!
Muitos realizaram rituais Gayatri nesta primavera Navratri; Espero que eles compartilhem a experiência.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...