குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 30, 2023

ஸ்ரீ காயத்ரி சஹஸ்ர நாம சாதனை

 ஸ்ரீ காயத்ரி சஹஸ்ர நாம சாதனை


இந்த வசந்த நவராத்ரியில் பத்து நாட்கள் குரு நாதர் ஸ்ரீ ஸக்தி சுமனனனின் வழிகாட்டலில் உலகெங்குமுள்ள காயத்ரி சாதகர்கள் ஸ்ரீ காயத்ரி லகு அனுஷ்டானமும், காயத்ரி சஹஸ்ர நாம சாதனையும் செய்தனர். 


காயத்ரியின் சூக்ஷ்ம ஆற்றல்கள் அனந்தமானவை; எண்ணில் அடங்காதவை; இந்த எண்ணிலடங்காத ஆற்றலைத் தொகுத்து மனித மனதிற்கு உணர்த்தும் தோத்திரமே சஹஸ்ர நாம ஸ்தோத்திரம்.


சஹஸ்ர என்ற சொல் எல்லையற்றது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாராம்சத்தில் ஆயிரம். ஆனால் மற்ற இடங்களில் எண்ணிலடங்காத எண்ணைக் குறிக்க ஆயிரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைவனின் பிரார்த்தனை 'சஹஸ்ரசிர்ஷா'. இந்த பிரார்த்தனையில், கடவுள் 'சஹஸ்ரபாஹா, சஹஸ்ரபாதா, சஹஸ்ரநேத்ரா' என்று கூறப்படுகிறது. இங்கே அந்த ஸஹஸ்ரத்தின் அர்த்தம் எல்லையற்றது என்பதாகும். 


சஹஸ்ர நாமம் என்பது ஒர் ரிஷி எல்லையற்ற ஆற்றல்களை தனது தபஸினூடாக அனுபவித்த நிலைகளை ஆயிரம் எண்ணிக்கைக்குள் மனிதர்களுக்கு அனுவம் கிடைக்க திருஷ்டித்த மந்திரங்கள். 


காயத்ரி தேவியின் அனந்த சக்திகளை விபரிக்கும் இரண்டு சஹஸ்ர நாமங்கள் எமக்கு குருபரம்பரையினூடாக கிடைத்த்திருக்கிறது. 


1) தேவிபாகவதத்தில் இருக்கும் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாமாவளி - இது பிரம்மாவினால் திருஷ்டிக்கப்பட்டது. விஞ் ஞானமய கோஷ விருத்திக்கானது. 


2) ருத்யாமள தந்திரத்தில் இருக்கும் தத்கார சஹஸ்ர நாமம் - இது பைரவ ரிஷியால் தரப்பட்ட தந்திர சாதனைக்குரியது. 


இந்த நவராத்ரியில் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாம சாதனை ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களால் கற்பிக்கப்பட்டது. 


இந்த சஹஸ்ர நாம சாதனையின் பலனை தேவிபாகவத்தில் ஸ்ரீ நாராயண ரிஷி ஸ்ரீ நாரத ரிஷியிற்கு கீழ்வ்ருமாறு கூறுகிறார். 


ஸர்வ பாப நிவர்த்தி ஸர்வ ஸம்பத்துக்களையும் தரக்கூடியது


ஓ நாரதா, இது காயத்ரி தேவியின் ஆயிரம் பெயர்கள்.

புண்ணியத்தை அருளும், எல்லா பாவங்களையும் அழித்து, பெரும் செல்வத்தை அளிக்கும். 156॥

 

இதனால் காயத்ரியின் ஆயிரம் நாமங்கள் அனைத்து தோஷங்களையும் நீக்கக்கூடியது. அஷ்டமியில் இந்த மந்திரத்தை சித்திபெற்ற குருவுடன் சேர்ந்து சொல்ல வேண்டும். 157॥


இதை ஒரு நல்ல பக்தனுக்கும், நல்ல சீடனுக்கும் சொல்ல வேண்டும். அதை வழிகேடு தேடுபவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பாசமிகுதியால் சொல்லக்கூடாது. 159॥


இது இரகசியத்திலும் இரகசியமானது; மிக உயர்ந்த பெரிய சாதனை. 


இந்த சாதனையைப் பூர்த்தி செய்வதன் மூலம் சாதாரண மனிதன் உயர்ந்த விடயங்களைச் செய்வதற்குரிய தகுதியைப் பெறுகிறான். 


இந்த காயத்ரி சஹஸ்ர நாம சாதனையைச் செய்யும் ஒரு ஏழை செல்வத்தைப் பெறத் தகுதியுடையவனாகிறான். 


முக்தியை நாடுபவர்களுக்கு முக்தியையும், காமத்தை நாடுபவர்களுக்கு அவர்கள் இச்சைகளையும் நிறைவேற்றுகிறது. 


நோயுற்றவன் நோயிலிருந்து விடுபடுகிறான், 


அடிமையாக கட்டுப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறான். 162॥


எத்தகைய பாபங்களைச் செய்தாலும் இந்த சஹஸ்ர நாம சாதனையைச் செய்வதால் அந்தப் பாவங்களிலிருந்து ஒருமுறை விடுவிக்கப்படுகிறான்; இதன் அர்த்தம் மீண்டும் அதே பாவத்தைச் செய்துவிட்டு இந்த சாதனையால் பலனைப் பெற முடியாது என்பதாம் 163॥


தாமரையில் பிறந்தவனே, நான் உனக்குச் சொன்ன தூய ரகசியம் இதுதான். இந்த சஹஸ்ர நாம சாதனை முழுமையான உண்மையுடன் செய்யும் போது  சாதகர்களை பிரம்மசாயுஜ்யம் என்ற சத்தியத்துடன் ஒன்றிணைக்கும்  என்பதில் சந்தேகமில்லை. 165॥


இந்த அரிய சாதனையை கற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனையினை செய்ய வேண்டும். 


இன்னும் பல சாதனா இரகசியங்கள் படிப்படியாக தகுதியுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.  

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...