குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 02, 2023

ஆய்வுகளைச் சமூக மயப்படுத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக கற்றறிவாளர் ஒருவருடன் ஒரு உரையாடல். நாம் இருவரும் ஆரம்ப கால சூழலியல் ஆய்வாளர்கள்! ஒரு சாலை சூழலியல் மாணாக்கர்கள்! 
அண்மையில் மிகப்பெரிய முக நூல் பிரச்சனையாக தொல்பொருள்திணைக்களத்தின் நடவடிக்கைகள் பற்றி உரையாடினோம். நூலகர் என்ற வகையில் ஆவணப்படுத்தலின் அவசியம் அறிந்தவர். 
நாம் ஆய்வுகள் என்றால் பல்கலைக்கழகமும், கலாநிதிகளும் என்று சட்டம் போட்டுவிட்டு பல்கலைக்கழகம் ஏதாவது செய்யும் என்று இலவு காத்த கிளியாக காத்திருந்தால் பல்கலைக்கழக்த்தில் இருப்பவர் பேராசிரியர் பதவிக்கு எத்தனை இந்த ஜெர்னல் போட்டால் எத்தனை புள்ளி கிடைக்கும், இதற்கு மேல் நான் ஏன் கஷ்டப்படவேண்டும் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள்.
நாம் தொல்லியல், சமூக, சுவடியல் ஆய்வுகளை நூலகம் திட்டம் {https://noolaham.org} போன்று சமூக மயமாக்க வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்களை உள்வாங்கி சரியான பயிற்சி கொடுத்து, தற்போதுள்ள தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு செயற்படுத்த வேண்டும். 
ஒரு higher resolution mobile camera இருந்தால் இருக்கும் கல்வெட்டுக்களைத் தொடுவதற்கு அனுமதி கூட தேவையில்லை. AI தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்தால் கல்வெட்டினை வாசிப்பதற்கு நிபுணர் தேவையில்லை. முக நூலில் பகை வளர்க்கும், துவேஷம் தெளிக்கும் கருத்துக்களைப் பகிர்வதை விட்டு விட்டு ஆக்க பூர்வமாக செயற்பட வேண்டும். 
வடகிழக்கில் இருக்கும் தொல்பொருட் சின்னங்களைப் படித்து அதைப்பற்றி எழுதுவதற்குரிய ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்கள் தாண்டி சமூக ஆய்வாளர்கள் அதிகம் உருவாக வேண்டும். 
இதைப்போல் இருக்கும் சுவடிகளை படித்து மின்னூலாக்கம் செய்து பகிரங்கப்படுத்த பல நூறு ஆய்வாளர்கள் உருவாக வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...