குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 24, 2023

இயற்கையும் மனிதனும் ஒத்திசைவும்

மேற்கத்தேய அணுகுமுறை Vs பாரதீய அணுகுமுறை
நேற்றைய பதிவில் உலகின் இரு புராதன மெய்யியல் கலாச்சாரம் வாழ்க்கையை உலகை எப்படிப் பார்க்கிறது என்ற தாகூரின் விளக்கத்தைப் பார்த்தோம். 
கிரேக்கம் சுவர்களுக்குள் அடைபட்ட பிளவுபட்ட பார்வையின் மூலம் அறிவைச் சேகரிக்க முனைந்தது. 
பாரதம் ஆரண்யம் எனும் இயற்கையோடு ஒன்றி வாழும் தானும் இயற்கையும் ஒன்றுடன் ஒன்றுபட்ட கூறுகள் என்ற அனுபவ அறிவினைப் பெறமுயன்றது. 
பாரதத்தின் புராதன ரிஷிகள் சித்தர்களின் மரபு மனிதனது ஆன்மாவையும் இயற்கையின் ஆன்மாவையும் எப்படி இணைத்து ஒத்திசைவாக வாழ்வது என்பதே! இந்த great harmony இனை உருவாக்கக் கூடியவற்றை கற்பதே இங்கு கலைகள் எனப்பட்டது. 
01.சங்கீதக்கலையை எடுத்தால் அது ஒலியின் ஒத்திசைவு
02.நாடகக் கலையை எடுத்தால் அது உடல் அசைவின் ஒத்திசைவு
03.கவிதைக் கலையை எடுத்தால் அது சொற்களின் மொழியின் ஒத்திசைவு
04.ஜோதிடக் கலையை எடுத்தால் அது பரபஞ்ச சக்திகளதும் பூமியினதும், பூமியில் வாழும் மனிதர்களினதும் ஒத்திசைவு
இப்படி ஆயகலைகள் 64 என்று சொல்லப்படும் அனைத்தும் இந்த great harmony இனை உருவாக்குவதன் நோக்கமாக இருந்தது. 
பிற்காலத்தில் இந்த ஆரண்யங்கள் விவசாய பூமியாகி அரசர்களால் இராசதானியாக்கப்பட்டாலும் பல்வேறு புறவயமான வளங்கள், செல்வங்களை நோக்கிச் சென்றாலும் அரசனாக இருந்தாலும் அனைவருடைய நோக்கமும் எளிமையான வாழ்க்கையும் தன்னுணர்வு பெறத் தவம் புரிதலுமாகவே இருந்துள்ளது. ஆரண்யங்களில் சென்று இயற்கை தரும் அந்த அகத்தூண்டலைப் பெற்று அங்கிருந்து தபஸினைச் செய்து வரும் உந்தல் அனைவரிலும் இருந்துள்ளது. 
ஆனால் மேற்கத்தேயச் சிந்தனை இயற்கையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற பெருமையை உடையது. பனியாலும், கால நிலையாலும் பாதிக்கப்படும் அடக்குமுறைச் சூழலில் வாழும் மனிதர்கள் எப்படியாவது அதை வென்றுவிட வேண்டும் என்ற மனமே உருவாகிறது. நாம் ஒரு விரோதமான உலகில் வாழ்வது போலவும், விருப்பமில்லாத மற்றும் அந்நியமான விஷயங்களிலிருந்து நாம் விரும்பும் அனைத்தையும் பறிக்க வேண்டும் என்றும் இந்த சுவர் மன நிலை உருவாகிறது. 
நகர வாழ்க்கையில் மனிதன் இயற்கையாகவே தன் மனப் பார்வையின் செறிவூட்டப்பட்ட தனது அக ஒளியை அவனது சொந்த வாழ்க்கை மற்றும் படைப்புகளின் மீது தனது சொந்த முன்னேற்றம் கருதிச் செலுத்துகிறான். மேலும் இது அவனுக்கும் பிரபஞ்ச இயற்கைக்கும் இடையில் ஒரு செயற்கையான விலகலை உருவாக்குகிறது.
ஆனால் பாரதத்தில் இந்த அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது; இது உலகையும் மனிதனையும் ஒரே சத்தியமாகக் கண்டது; இதனால் பாரதத்தின் ஞானம் என்பது புறவயமான இயற்கையை வெல்வதாக இல்லாமல் இயற்கையுடன் எப்படி மனிதன் தனக்கு ஒரு ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியாகவே இருந்தது. 
இந்தப் பகுதியில் தாகூர் மனிதனும் இயற்கையும் ஒன்றுடன் ஒத்திசைவதற்கான முயற்சியே பாரதீய ஞானம் என்பதையும், மேற்குமெய்யியல் இயற்கையை வென்று அடக்குவதையும், போரிடுவதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் விளக்குகிறார்.
தாகூரின் சாதனா - வாழ்வினை உணர்ந்தறிதலை பற்றிய ஸ்ரீ ஸக்தி சுமனனின் உரை தொடரும்.........

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...