குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 23, 2023

மனிதனும் பிரபஞ்ச தொடர்பும்

முதலாவது அத்தியாயம் மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு எப்படியானது பற்றிய மெய்யியலை மேற்கத்தேய மனது எப்படி உருவாகிறது என்ற உதாரணத்துடன் ஆரம்பிக்கிறார். 
மேற்கத்தேய மெய்யியலின் ஆரம்பம் கிரேக்கம். கிரேக்கத்தைப் பற்றிய அறிமுகத்தை இப்படி ஆரம்பிக்கிறார். புராதன கிரேக்க நாகரீகம் சுவர்களுக்கு நடுவே வளர்ந்தது என்ற உவமானத்தோடு தனது மெய்யியல் பிரச்சனையை ஆரம்பிக்கிறார். எல்லா நாகரீகங்களும் சுவர்களையும், கட்டுமானங்களையும் கொண்டிருக்கிறது தான். ஆனால் இந்தச் சுவர்கள் மனித மன உருவாகத்தில் பங்குபெறுகிறது என்பது தான் தாகூரின் அடிப்படைக் கருதுகோள்! இந்தச் சுவர்கள் மனித மனத்தில் ஒவ்வொன்றையும் பிரித்து ஆளும் மன நிலையை உருவாக்குகிறது என்று தாகூர் கூறுகிறார்.
சுவர்க்கலாச்சாரத்தின் நீட்சியை இன்று நாம் நகரங்களில் apartment கலாச்சாரமாகக் காண்கிறோம். இதன் தன்மை 

1) சுவர்களை ஏற்படுத்துவதன் மூலம் எம்மிடம் தனிப்பட்ட பெறுமதிமிக்க ஒன்று இருக்கிறது, அதைப் பாதுகாக்க நாம் சுவரை எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. 

2) இந்த அடிப்படைப் பிளவு பிறகு நாட்டினைப் பிரிக்க, அறிவினைப் பிரிக்க, மனிதர்களைப் பிரிக்க, இயற்கையைப் பிரிக்க என்று பிளவுபட்ட மன நிலைக்குக் காரணமாகிறது. 

3) இப்படிப் பிளவுபடுத்தி தடைகளை நாமே உருவாக்கி விட்டு பிறகு அந்தத் தடைகளை உடைக்க நாம் போராடுகிறோம் என்று தினசரி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். 
கிரேக்க மெய்யியலால் உருவாகிய மேற்கத்தேய சிந்தனை முறை, கல்விமுறையால் இந்த வழுவை நாம் இன்று எல்லாத்துறைகளிலும் காண்கிறோம். அனைத்தையும் பகுத்து desect செய்து பிளவுபட்டவர்களாகவே சிந்திக்கிறோம். 
ஆனால் பாரத வாழ்வியல் ஆரண்யங்கள் எனப்படும் இயற்கையுடன் ஒன்றுபட்ட நாகரீகமாக வளர்ந்தது. இந்த நாகரீகத்தின் பிறப்பிலிருந்தே இது இயற்கையுடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் எல்லா அமிசங்களிலும் இயற்கை உறவு கொண்டிருந்தது. இத்தகைய இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை மனித புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தாமல் வாழும் அறிவுத்திறனை மழுங்கடிக்கும், இருப்புத்தரங்களை குறைக்கும், முன்னேற விரும்பாத வாழ்க்கை முறையாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் புராதன இந்தியாவின் இந்த ஆரண்ய வாழ்க்கை மனித மனதை கட்டுப்படுத்தி தனதாக்கி வெல்லவில்லை. மனதின் ஆற்றலைக் குறைக்கவில்லை. அது மனதை ஒரு திசையில் செலுத்தி ஒருமைப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்தது. 
இயற்கையின் உயிரோட்டமான வளர்ச்சியுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்ததால், அவனால் தன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர்களினால் கட்டுப்படுத்தப்பட்ட அதீத இச்சையால் பாதிக்கப்பட்டாத ஒருவனாக அவனால் இருக்க முடிந்தது. அவனுடைய நோக்கம் அறிவைச் சேகரிப்பதல்ல! அவன் தன்னுடைய உணர்வினைப் பெருக்கி தன்னை வளர்த்து எல்லைகளைத் தாண்டி விரிவதாக இருந்தது. 
அவன் உண்மை என்பது எல்லாவற்றையும் அடக்கிய முழுமை என்ற பார்வையைப் பெற்றான். அண்மையில் சைவ சித்தாந்தம் வளர்க்கிறோம் என்று சைவத்தை எல்லாம் அடக்கிய ஒன்றாக உணராமல், இது சைவம் அல்ல, என்று எல்லாவற்றையும் பிளவுபடுத்திப் பார்க்கும் கிரேக்க மெய்யியல் சிந்தனை சைவம் சிலர் உருவாக்கி வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மேற்கத்தேய கிரேக்க மெய்யியல் சுவர்களால் மட்டுப்படுத்தப்பட்டதை அறிவதையே முதன்மையாகக் கொண்டு செயல்பட இந்திய மெய்யியல் ஆரண்ய மெய்யியலாக இயற்கையுடன் ஒன்றுபட்டு தொடர்புற்று தனது உணர்வினை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற அடிப்படையை விளக்குகிறார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...