குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 07, 2022

தலைப்பு இல்லை

 

ஜோதிடம் பார்க்கிறோம், படிக்கிறோம் எனும் எல்லோரும் அதனுடைய ஆழமான விதிகளைப் புரிந்துகொள்வதில்லை! பெரும்பாலும் ஜோதிடம் கற்கவேண்டும் என்பதோ, எந்தக்கலையைக் கற்க நினைப்பவர்களதும் உளவியல் மற்றவர்களை விட தன்னிடம் ஒரு சிறப்புத் தகுதி இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கும்!

எந்தவொரு கலையிலும் கற்று முடித்துவிட்டோம் என்ற நிலை இல்லை; கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை!

ஜோதிடம் கற்பவர்கள் பெரும்பாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியவோ, தமக்கு ஏதாவது தவறாக நடந்துவிடும் என்ற சிந்தனையுடனேயே ஜோதிடத்தை அணுகுகிறார்கள். ஆனால் பராசர மகரிஷி எப்போது மனச் சமநிலையுடையவனும், குருபக்தி மிகுந்தவனும், சத்தியத்தை மாத்திரம் பேசுபவனும், கடவுளில் நம்பிக்கையுள்ளவனுக்கு மாத்திரமே ஜோதிடம் கற்பிக்கப்பட வேண்டியது என்கிறார்.

சந்தேகபுத்தியுள்ளவனும், குதர்க்கம் நிறைந்தவனும், கடவுள் மீதோ, குருமீதோ நம்பிக்கையில்லாதவனுக்கும் இந்த வித்தை மேலும் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்.

உண்மையில் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை அறிய வேண்டுமானால் அதன் மூல நூல்களைத் தொட வேண்டும்!

எனது தனிப்பட்ட தேடல்களில் ஒரு கலையினைப் பற்றி அறிய வேண்டும் என்றால் வேர்வரை சென்று புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான்!

ஜோதிடத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்பவர்கள் ஜோதிடம் எமது கண்களுக்குப் புலனாகாத சக்திகள் எமது மனதின் சித்தம் என்ற பகுதிக்கூடாக எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பது பற்றிய ஒரு மறையியல் கலை என்பதை ஜோதிட மூல நூலான ப்ருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் படிப்பதன் மூலம் புரிந்துகொள்வார்கள்.

பராசர ஹோர சாஸ்த்திரம் ஒருவனுடைய கர்மம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கும் சுலோகத்தில் இப்படிச் சொல்லுகிறது.

ஒருவன் பிறக்கும் போது கிழக்கு வானில் இருக்கும் ராசி - லக்கினமும் - அது சார்ந்து நவக்கிரகங்களும் இருக்கும் நிலை அவனுடைய கர்மங்களை செயற்படுத்தும் குறிகாட்டிகளாக இருக்கிறது என்கிறார்.

இதுபோல் 86 வது அத்தியாயத்தில் கிரகங்களின் ஆற்றல் குறைவதை தியான சாதனைகள் மூலம் ஈர்க்கலாம் என்று விளக்குகிறார்கள்.

இந்த நூல் பராசர முனிவர் தனது மாணவனாகிய மைத்திரேயருக்கு கூறிய வடிவில் இருக்கிறது. ஜோதிட சாஸ்த்திரத்தை ஆழமாக கற்க விரும்பவர்கள் கற்க வேண்டிய நூல்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...