குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 16, 2022

தலைப்பு இல்லை

 

பதஞ்சலி யோகத்தில் ஈஸ்வரனைப் பணிதலால் மாத்திரமே யோகம் பூர்த்தியடைகிறது, எமது சித்த விருத்திகளை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார். பதஞ்சலி வெறுமனே நம்பிக்கைக்காக இறைவனைப் பணியச் சொல்லவில்லை.

ஏன் இறைவனைப் பணிய வேண்டும் என்பதற்கு மூன்று சூத்திரங்களில் காரணங்கள் சொல்கிறார்; யோகியானவன் தனது சித்தத்தின் விருத்திகளை அடக்க வேண்டும்; அந்த நிலையை அடைய வேண்டும் என்றால், அந்த நிலையில் இருக்கும் ஒரு ஆற்றலை எமக்கு reference point ஆக, இலக்காக வைத்திருக்க வேண்டும். இதனை திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றலரிது

ஆகவே;

1) கிலேசங்கள், கர்ம பலன்கள் ஆகிய மூன்றாலும் தீண்டப்படாத ஒரு ஆற்றல் இறைவன். இதுவே யோகி அடைய வேண்டிய நிலை.  

2) மனிதன் அறியக்கூடிய அறிவில் எல்லையும் இறைவன் என்கிறார்.

3) காலத்திற்கு கட்டுப்படாத ஆற்றல் இறைவன்.

4) பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தையும் வழி நடாத்தும் அகச்சக்தி இறைவன்

இந்த நான்கு பண்புகளும் கொண்ட இறைவனை எமது reference point ஆக வைக்காமல் எவருக்கும் யோகம் பூரணமாகும் சாத்தியம் இல்லை.

இதை எப்படி தேவி உபாசனையில் சாத்தியமாக்கலாம் என எனது குருநாதர் ஸ்ரீ யோகம் அல்லது ஸ்ரீ வித்யா என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளார். அது வருமாறு;

ஸ்ரீ யோகம் என்பது தெய்வீக அருளுடன் எம்மை இணைப்பது. நீங்கள் அவளுடன் ஒரு தாயாக, சகோதரியாக, குழந்தையாக, தோழியாக, சேவையாளராக அல்லது காதலனாக கூட இணையலாம்; எந்த உறவையும் அவள் ஏற்றுக்கொள்வாள்.

அவளுக்கு யோகம், எமக்கு எந்த எந்த வழி கவர்ச்சியாக இருக்கிறதோ அதன் மூலம் தன்னுடன் ஒன்றிணைக்க அவள் எங்களை அழைக்கிறாள். அல்லது, ஒரு சீடன் குருவுடன் இருப்பது போல அவளுடன் நெருக்கமாக இருங்கள். அல்லது அவளுடைய வேலைகளைச் செய்து அவளுக்குச் சேவை செய்யுங்கள். நான் எப்படி அவளிடம் பிரார்த்தனை செய்வது? தேவி உபாசனையில் கடவுளை பெண்ணாக வணங்குகிறோம். அவள் உனக்கு உயிர் கொடுத்தாள். அவளே உன் உயிர். உங்கள் வாழ்க்கையை அவளுக்கு வழங்குங்கள். ஒவ்வொரு நாளும் அவளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், அவளை உங்கள் வாழ்க்கையில் கீழ்க்கண்டவாறு அழைக்கவும்:

“தேவி, நீங்கள் மிக உயர்ந்த பரிசான இந்த வாழ்க்கையை எனக்குத் தந்துள்ளீர்கள். என்னை இவ்வுலகில் பார்க்கவும் அறியவும் செயல்படவும் செய்துள்ளீர்கள். எனக்கு இந்த வாழ்க்கை இல்லையென்றால் வேறு எந்த பரிசுக்கும் மதிப்பு என்ன? உங்கள் காலடியில் அனைத்தையும் மனப்பூர்வமாக சமர்ப்பிக்கிறேன். எனது உடல், உயிர், மனம், செல்வம் மற்றும் அழகை உங்கள் சேவையில் சமர்ப்பிக்கிறேன். எனது கடந்தகால பாவங்கள் எதுவாக இருந்தாலும், தயவுசெய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், என் பாவங்களையும் புண்ணியங்களையும் தழுவி, என்னை உங்களில் இணைக்கவும். இந்த உலகத்தை பெரும்பாலான மக்கள் பாடும், நடனமாடும், வாழ்க்கையை அனுபவிக்கும், சுதந்திரமாக, எல்லா இடங்களிலும் சேவை செய்யும் இடமாக, நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்ந்து அனைவருடனும் இன்பத்தை, நன்மையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாற்றுவதற்கான உங்கள் திட்டங்களுக்கு என்னை உங்கள் கருவியாக ஆக்குங்கள். நான் உங்கள் முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். என்னுள் இருங்கள், ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்துங்கள்.

அவளிடம் உங்கள் பிரார்த்தனை இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

தேவிபுரம்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...