குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 25, 2022

கலைஞர்களின் பிராணச் சிக்கல்

 

ஒரு சில கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்களைப் பார்த்தால் போதை, குடி, காமம் போன்ற தவறான பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையின் ஒரு பகுதி இருள் நிறைந்ததாக காணப்படுவார்கள்.

இதற்குரிய காரணத்தை யோக சாத்திரத்தின் பிராண வித்தை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

இது அவர்களின் கலையின் செம்மையால் உருவாகும், அதிக பிராணனின் தவறான வழியில் செல்வதால் உருவாகும் பிரச்சனையாகும்!

எந்த ஒரு கலையிலும் நிபுணத்துவமும் என்பது மனதில் அந்தக்கலைக்குரிய செம்மையினை உருவாக்கி அதற்கு பிராணசக்தியைச் செலுத்தி உடலின் மூலம் வெளிப்படுத்துவதாகும்.

உதாரணமாக நன்றாகப் பாடுகிறோம் என்றால் மனதில் ஸ்வர நிலைகளை செம்மைப்படுத்தி குரல்வளையை இசைத்து பாட வேண்டும். இது செம்மையாக அவன் தனது மனதிற்கும், உடலிற்கும் பிராண சக்தியினைக் கொண்டுவர வேண்டும். இப்படி பிராண சக்தியினை அதீதமாகக் கொண்டு வருபவர்களே எல்லோராலும் சிறந்த பாடகர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள்

இப்படி ஒரு கலையில் செம்மையை அடையும் போது அதீத பிராண சக்தி வாய்க்கிறது. இப்படி அளவிற்கு அதிகமாக பிராண ஆற்றல் வாய்க்கும் போது அந்தக் கலையினை பிரயோகிக்காத போதும் அவர்களிடம் அதிக பிராணன் இருக்கும். அந்தப் பிராணன் அவர்களின் உடலையும், மனதையும் தன்னை வெளியேற்ற உந்தித்தள்ளும். இந்த உந்தலை சமப்படுத்திக்கொள்ள அவர்கள் தமது சித்தத்தில் ஏற்கனவே இருக்கும் காம சம்ஸ்காரங்களின் படி உந்தலாம்!

மனதில் அதிக அழுத்தம் உண்டாவதால் தற்காலிகமாக மூளையை சாந்தப்படுத்த குடிப்பழக்கம் உருவாகலாம்.

இதனால் தான் முற்காலத்தில் கலை பயில்பவர்களுக்கு அதிகமாக உருவாகும் பிராணனை இப்படி தாழ் நிலைக்குச் செல்லாமல் தடுக்க எல்லாக் கலைகளையும் உயர் உணர்வாகிய இறைவனை நோக்கியே இருக்க வேண்டும் என்று விதித்து வைத்தார்கள்.

நடனம் நடராஜருக்கு,

இசை தியாகராஜருக்கு,

என்றெல்லாம் அர்ப்பணித்து கலையை ஆராதிக்கச் சொன்னார்கள்.

இன்று கலையை மனதில், உடலில் செம்மைப்படுத்தும் கலைஞர்கள் தமது கலையால் பெறும் பிராண ஆற்றலை உயர் உணர்விற்கு செலுத்தத் தெரியாத போது தாழ் உணர்வுகளில் சிக்கிக்கொண்டு தடுமாறி விடுகிறார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...