குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 29, 2022

நம்பிக்கை

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய சொத்து.

கணவன்- மனைவி

முதலாளி-தொழிலாளி

நண்பர்கள்

வியாபார பங்குதாரர்கள்

குரு - சிஷ்யன்

இப்படி எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறக்க முடியும்.

பொதுவாக நான் நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனால் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இப்படிச் சொன்னால் அதன் அர்த்தம் நம்பிக்கை என்றால் என்ன? உண்மையான நம்பிக்கையின் குறிகள் என்ன என்பதை அவர் அறியாமையே,

பலர் நம்பிக்கை என்றவுடன் வாயால் வடை சுட்டு மற்றவர்களை ஒத்திசையச் செய்வது என்று நம்புகிறார்கள். இது ஒருவகை ஏமாற்று வித்தை.

உண்மையான நம்பிக்கை என்பது பல குணம், தகுதி, நேர்மை, நோக்கம், அக்கறை, வெளிப்படைத்தன்மை, திறந்த மனம், திறன், அறிவு, அனுபவம், செயல்திறன், மதிப்பு போன்ற பல வேர்களைக்கொண்ட ஆலவிருட்சம் போன்றது. இப்படி முறையாக கட்டியெழுப்பப்படும் நம்பிக்கை ஆலவிருட்சம் போன்று பல ஆயிரம் பேரிற்கு நிழல்தரக்கூடியது.

நம்பிக்கையிற்கு இரண்டு பிரதான கைகள். எம்முடையதும், நாம் நம்பிக்கை கொள்ளுபவரின் குணமும், தகுதியும். இருவரும் ஒத்த குணமோ அல்லது ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் குணமோ இல்லை எனில் நம்பிக்கை வளர்வது கடினம். எடுத்ததெற்கெல்லாம் குறை கூறுவது, தவறாக பேசும் குணம் இருந்தால் அந்த நபர் மீது எவருக்கும் நம்பிக்கை வராது.

நாம் ஒருவரை குணத்தின் அடிப்படையில் நம்பினாலும் நாம் நம்பும் விஷயத்தை பூர்த்தி செய்யும் தகுதி அந்த நபரிற்கு இருக்கிறதா என்பது அவசியமான ஒன்று. பொதுவாக நல்ல குணமுள்ளவர் என்று எமது வியாபாரத்தில் அந்தப் பையனை வைத்தேன். இப்போது எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு பணம் சென்றது என்று தெரியவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டு, எப்படி என்றாலும் கள்ளம் கபடமில்லாத பையன் என்று கூறினால், அவர் தகுதியானவரை நம்பவில்லை என்று பொருள். குணத்தை மட்டுமே கருத்தில் எடுத்திருக்கிறார்.

அதேபோல் நன்றாக படித்திருக்கிறான், அறிவாளி என்று தகுதி எல்லாம் பார்த்து வேலைக்கு எடுத்த பையன் காசை சுருட்டிக்கொண்டு போய்விட்டான் என்றால் தகுதி இருந்தாலும் குணம் சரியில்லை என்று பொருள்.

ஆக நம்பிக்கை வளர குணமும், தகுதியும் மிக அவசியமான இரண்டு தூண்கள்.

குணத்தை எப்படி நல்ல குணம் என்றும், எமது நம்பிக்கைக்கு பாத்திரமாவான் என்றும் அறிவது, அவனது நோக்கத்தை அறிவதன் மூலம், நோக்கத்தை அறிவதற்கு மூன்று காரணிகள் உள்ளது. நாம் சொல்லும் விஷயத்தை அக்கறையுடன் கேட்கிறானா, வெளிப்படையாக தனது நடத்தையிலும் பேச்சிலும் இருக்கிறானா, கூறுபவற்றை திறந்த மனத்துடன் அணுகுகிறானா என்பதைக் கொண்டு ஒருவரின் குணத்தை அறியலாம்.

குணத்தின் அடுத்த குறியீடு நேர்மை, ஒரு விஷயத்தை அணுகும்போது நேர்மையுடன், பாரபட்சம் இன்றி, நம்பகத்தன்மையுடன் அணுகினால் அவனது குணம் நல்ல குணம் என்று அனுமானிக்கலாம்.

தகுதியை அறிவதற்கு இரண்டு விஷயங்களை அவதானிக்கலாம். குறித்த வேலைக்கான அவனது திறனும், அந்த வேலையில் இதுவரை பெற்ற பெறுபேறுகளும்.

குறித்த விஷயத்தில் திறன், அறிவு, அனுபவம் உண்டா என்பதைக்கொண்டு அவனது திறனை அனுமானிக்கலாம்.

பெறுபேறுகளை அவனது மதிப்பையும், அவன் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினைக் கொண்டும், செயல்திறன் கொண்டும் அறியலாம்.

நம்பிக்கை என்பது என்னவென்று அறிந்து நம்பிக்கை வளர்ப்போம்.

Reposting the old writing: 17th August 2018

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...