குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 22, 2022

ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானியின் ஆன்மீக அனுபவம்

 

இருபது வருடங்களுக்கு மேல் ஒரு இயற்பியல் விஞ்ஞானியாக சந்தேகத்துடன் கேள்வி கேட்பதையே தனது மனப்பழக்கமாக வைத்திருந்த ஒரு இயற்பியலாளர் திடீரென ஒரு தேவி உபாசகராக மாறி அகவயப்படுவதற்கு சுய ஆன்மீக அனுபவம் தேவைப்படுகிறது.

இயற்பியல் விஞ்ஞானியாக எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் (Dr. N. Prahaladha Sastry) தனது பயணத்தில் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இறைவன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று கூறுவார். அத்தகைய ஒரு அனுபவம் இங்கே தமிழில்:

குருநாதரிற்கு தியான அனுபவங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் அவரது தியானத்தின் போது மனக்கண்னில் "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள் தோன்றியது. இதன் அர்த்தம் "பிரபஞ்சம் இறைவனால் வாழ்கிறது, இறைவனால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்தக் காட்சியின் சில நாட்களுக்குப் பிறகு, அவர் TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்) ஐச் சேர்ந்த சக ஆய்வாளரது வீட்டிற்குச் சென்றார், அவர் நிறைய ஆன்மீக புத்தகங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை பராமரிக்கிறார். அவரது புத்தக அலுமாரிகளை நோட்டமிடும்போது ஈஷோபநிஷத்தின் சிறுகுறிப்பு பதிப்பு ஒன்று கண்களிற்கு பட்டது. அந்த நூலைத் திறந்தபோது தான் தியானத்தின் காட்சியில் கண்ட "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள் அதில் அப்படியே இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்.

இந்த அனுபவத்தை அவர் இப்படி விபரித்தார்;

எனது தர்க்கத்துடன் கூடிய பகுத்தறிவு மனம் சற்றே சிதைந்து போனது; எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத ஒரு புத்தகத்திலிருந்து எப்படி நான் முதலே வாசித்திருக்க முடியும். அப்படியென்றால் இது ஏற்கனவே மரபணுக்களில் இருந்ததா? அந்தத் தகவலை எனது மனம் அணுக முடிந்ததா? உண்மையை அணுக (அறிவியலுடன் கூடிய) பகுத்தறிவு மாத்திரம் தான் வழி என்ற எனது புரிதல் படிப்படியாக உடைந்து கொண்டிருந்தது. உண்மையினை அறிவதற்கு தர்க்கத்துடன் கூடிய பகுத்தறிவற்ற, உணர்ச்சிகளால், தர்க்கமற்ற முழுமையான வழிகள் இருப்பதை நான் உணர ஆரம்பித்தேன்.

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி Homi J. Bhabha இனால் ஆரம்பிக்கப்பட்ட TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்) இனது அணு இயற்பியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். தனது அக அனுபவத்தின் பின்னர் தேவி உபாசகராக பலருக்கும் குருவாக உலகெங்கும் அறியப்பட்டவர், எனது குருநாதர்!

From The Goddess And The Guru A Spiritual Biography Of Sri Amritananda Natha Saraswathi by Michael Bowden

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...