குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 22, 2022

ஓஜஸ் என்றால் என்ன?

 

ஓஜஸ் அல்லது ஓஜா என்றால் உயிர், வீரியம், பளபளப்பு, சக்தி, உடல் வலிமை, ஆற்றல் என்று சமஸ்க்ருத அகராதி பொருள் தருகிறது. ஆயுர்வேதத்தில் உடலைக் கட்டமைக்கும் ஏழு தாதுக்களின் சாராம்சமான செறிவு ஓஜஸ் எனப்படுகிறது. ஆயுர்வேத அறிஞர்கள் ஓஜஸ் என்பது ஒரு தனிநபரின் வலிமை, வீரியம் மற்றும் உயிர்ச்சக்திக்கு பொறுப்பான, உடலின் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு தாதுவாகக் கருதுகிறார்கள். ஓஜஸின் குறிப்பிட்ட பண்புகள், அதன் சிறப்பியல்பு அம்சங்கள், அளவு, அதன் மூன்று நிலைகள், மருத்துவ அம்சங்கள் மற்றும் அதன் சிகிச்சை ஆகியவை சரக சம்ஹிதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் அடிப்படையில், ஆயுர்வேத மருத்துவர்கள் (வைத்யா) தற்போதைய மருத்துவ நடைமுறையில் ஓஜஸ் அசாதாரண நிலைகளுக்கு செல்லும் அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். இருப்பினும், நவீன விஞ்ஞானிகள் இன்னும் இதற்குரிய சரியான உடலியல் கூறுகளைத் தேடுகின்றனர்.

ஓஜஸ் என்பதை சுசுருதர் ஏழு தாதுகளிலிருந்தும் உருவான தூய்மையான, மிகச்சிறந்த சாரம் என வரைவிலக்கணப்படுத்துகிறார். (ஸுசுருத சம்ஹிதை, சூத்ர ஸ்தானம் 15/19); சரக சம்ஹிதை உடலில் இருக்கும் சமநிலை கெடாத கபம் ஓஜஸ் என்கிறது.

ஸுசுருத சம்ஹிதைப்படி ஒரு மனிதனின் அடிப்படை ஓஜஸ் சக்தி தந்தையின் சுக்கிலத்திலும், தாயின் சுரோணிதத்திலிருந்தும் கருவானது தனது ஆரம்ப ஓஜஸினைப் பெறுகிறது. இருவரும் அளிக்கும் ஓஜஸின் அளவிலிருந்தே கரு தனது உடல், அறிவு வளர்ச்சிக்கான ஆற்றலைப் பெறுகிறது. அதாவது கரு தாயின் உடலிலிருந்து போசனையைப் பெற்று நலமாக வாழ தந்தையும், தாயும் தமது சுக்கில் சுரோணித ஆற்றல்களில் தேவையான அளவு ஓஜஸ் சக்தியினைக் கொண்டிருக்க வேண்டும். பிறந்து உடல் வளரும் போது ஒவ்வொரு தாதிலிருந்தும் சாரமாக ஓஜஸ் சக்தி ஒவ்வொரு மனிதனிலும் உருவாவதாக ஸுசுருதர் போன்ற ஆயுர்வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். வாக்படர் போன்ற சில அறிஞர்கள் ஓஜஸ் என்பது சுக்கில தாதுவின் சாரம் என்று கருதுகிறார்கள்.

ஸுசுருதர் ஓஜஸினை விளக்க பாலிலிருந்து நெய் வருவதை உதாரணப்படுத்துகிறார்; பால் உறைகுத்தி தயிராகி, தயிரை கடைய மோராகி, மோரிலிருந்து வரும் நெய் போன்றது; சப்ததாதுக்களிலிருந்து சாரமாகி வரும் ஓஜஸ் எனும் தாது என்கிறார்.

சரகர் பூவில் வரும் தேன் போன்றது என்று இந்த ஓஜஸ் தாதுவினைக் குறிப்பிடுகிறார்.

ஓஜஸ் என்பது உடல் முழுவதும் ரக்த தாதுவில் நிறைந்து இதயத்தில் நிலைகொள்வதாக ஸுசுருதர் குறிப்பிடுகிறார். இதன்படி உடலில் இருவகையான ஓஜஸ் சக்தி இருக்கிறது.

1) பரா ஓஜஸ் - உயிரிற்கு ஆதாரமானது; தாய் தந்தையிடமிருந்து பெற்ற எட்டுத்துளிகள் இதயத்தில் இருப்பதாக ஸுசுருதர் குறிப்பிடுகிறார். இதை இழக்கும் போதே மரணம் ஏற்படுகிறதாக கூறுகிறார். உடல் பரா ஓஜஸினால்தான் சமநிலையில் ஆரோக்கியமாக இருக்கிறது.

2) அபரா ஓஜஸ் - இது நாம் உண்ணும் உணவு அன்ன ரஸமாகி அதிலிருந்து உடல் ரஸமாக சப்த தாதுக்களாக மாறி அவை ஒவ்வொன்றின் சாரமும் எமது இரத்தத்தைப் போசிப்பதால் எம்மில் உருவாகும் ஓஜஸ் சக்தி. இது ரத்தத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலை ஆரோக்கியமாகவும் ஒளிமிகுந்ததாகவும் வைத்திருக்கிறது.

வைத்யாச்சாரியார்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

22/06/2022

#ojas #ayurveda #ayurvedicmedicine #ayurvedalife #yoga #yogalife #yogapractice #sadhana #tantra #health

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...