குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 09, 2022

இலங்கையும் பேரழிவுச் சிந்தனையும்

 

தற்போது பெரும்பாலான இலங்கையர்கள் பேரழிவுச் சிந்தனை (Catastrophic thinking) பாதிப்பிற்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்வின் போன்ற செய்தித்தளங்கள், இந்திய ஊடகங்கள் பேரழிவுச் சிந்தனைக்கான பதட்டத்தை உருவாக்குவதையே செய்திகளாக வரையறுக்கிறது.

இது நீண்ட கவலையால், பதட்டத்தால் (anxiety) உருவாகும் மனநிலை! பதட்டம் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற எண்ணங்கள் இயல்பாக உருவாகும். உங்கள் பதட்டம் ஈர்க்கக்கூடிய கற்பனையை சந்திக்கும் போது, பேரழிவு சிந்தனை உருப்பெறும்.

உதாரணமாக எனது சம்பளம் ஒரு இலட்சம் ரூபாய், எரிபொருள் செலவு மாத்திரமே முப்பதாயிரம் வரப்போகிறது என்றவுடன் வரும் பதட்டம் கற்பனைக் குதிரையை தட்டிவிடும். உடனே இலங்கை அழியப்போகிறது! கோத்தபாய வீட்டிற்கு போ என்றெல்லாம் குதித்து எமது பதட்டத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்வோம்!

இப்படிப் பதட்டம் ஓரளவு தீர்ந்தவுடன் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு எமது அனாவசியச் செலவுகளை குறைப்பது எப்படி என்று ஆராயத்தொடங்குவோம். அனேகர் போராட்டங்களில் கலந்து கொள்வது தமது பதட்டத்தை வழிந்தோடச் செய்வதற்காகவே!

தற்போதைய ஆட்சியாளர்கள் 69 சதவீத மக்களுக்கு பேரழிவுச் சிந்தனையை விதைத்து ஒருவித பதட்டத்தை உருவாக்கி, அந்தப் பதட்டத்தை தாம் மட்டும்தான் தீர்க்க முடியும் என்று ஆழ்மனதில் பதிப்பித்த நம்பிக்கையாலேயே ஆட்சிக்கு வந்தனர்!

இந்த பேரழிவுச் சிந்தனை அரசியலில், அனேகமாக இந்திய, இலங்கை தேர்தல்களில் பயன்படுத்தப்படும் ஒரு உளவியல் உத்தி! பொதுவான தேர்தல்கள் நாட்டிற்கும், மக்களிற்கும் ஒரு பேரழிவு ஏற்படப் போவதாகவும், அதைக் காக்கும் ஆப்தாண்டவர்கள் தாம் என்பதும் போலவே கட்டமைக்கப்படும்!

இந்த உத்தியைப் பயன்படுத்திய இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களது அறிவீனம் பதட்டத்தை எல்லை மீறச் செய்து அசாதாரணப் பதட்டத்தை உருவாக்கி பாரிய பேரழிவுச் சிந்தனையை எல்லோரது மனதிலும் உருவாக்குகிறது. இதை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தூபம் போடுகிறது.

மக்களின் பதட்டம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பேரழிவுச் சிந்தனை பேரழிவு நடத்தைக்கு (Catastrophic behavior) செல்லும். இதுவே வன்முறையாக மாறுகிறது.

எமது பதட்டங்களை கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்து என்ன செய்யப்போவது என்பதை நிதானமாக திட்டமிடுவதும், ஆக்கபூர்வமாக மனதைப் பயன்படுத்துவதும் மன, உடல், சமூக ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...