குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 12, 2022

இலங்கையில் உணவுப் பஞ்சம் வருமா?

 

இலங்கை மக்கள் தமக்கான உணவினை உற்பத்தி செய்வதை மறந்து எங்கிருந்தோ இறக்குமதி செய்து பீட்ஸாவும், ஓட்ஸ் கஞ்சியும், பர்கரும், கோதுமை மாவும் சாப்பிடும் சோம்பேறிகளாக இருந்தால் நிச்சயம் பஞ்சம் வரும்! இவற்றையெல்லாம் வாங்குவதற்கு எம்மிடம் டாலர் இல்லை!

உடல் ஆரோக்கியமாக வாழ்வதைத் தாண்டி ருசிமாத்திரம் தான் உணவு என்று சுவைக்கு அடிமையாகியிருந்தால் நிச்சயமாக கஷ்டப்படத்தான் போகிறார்கள்.

எம்மிடம் வளமான மண் இருக்கிறது! நீர் இருக்கிறது! எந்த உரமும் போடாமல் வளரும் உணவுப் பயிர்களும் இருக்கிறது!

இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற அறிவு இல்லை! இது மட்டும் தான் உணவு என்ற மயக்கம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே உணவு உற்பத்தியில் எம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற பொறுப்பு உணர்ச்சி இல்லை! இவை எல்லாம் இல்லாதவை!

இருப்பதோ பதட்டமும் பயமும் மாத்திரம்!

ஒவ்வொரு வீட்டிலும், நிலம் இருப்பவர்கள், இருக்கும் இடம் எல்லாம் மரவள்ளி, வத்தாளைக் கிழங்கு, இராசவள்ளிக்கிழங்கு, முருங்கை, பலா, வாழை, ஈரப்பலா, கொவ்வை, கீரை என்று வளர்க்கத்தெரியுமாக இருந்தால்,

உரத்தை நம்பாமல் விளையும் அரிசி ரகங்களை கைவசம் வைத்திருந்தால், கௌப்பி, உழுந்து, குரக்கன் உணவுகள் உண்ணும் பழக்கம் இருந்தால்!

தென்னை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால்!

உணவுக்கு எங்கே பஞ்சம் வரப்போகிறது!

இளைஞர்களே, கணனியும் தொழிலும் பணம் தரும்! உற்பத்தி இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் உணவு வராது.

பணம் உங்களிடம் அதிகமாக இருந்தால் கிராமப்புறங்களில் வாழும் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தத்தெடுங்கள்! விவசாயம் செய்யத்தெரிந்தவர்களை ஆதரியுங்கள்!

முதலீடு செய்கிறேன் என்று செருக்குடன் போய் குழம்பாதீர்கள்! உற்பத்தி செய்பவர் வாழ்க்கைக்குத் தேவையானதை தகுந்த பணம் கொடுத்து அவரது விவசாயம் விழுந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியினை உருவாக்குங்கள்.

உற்பத்தியைப் பெருக்குங்கள்! உணவைத் தருவது இயற்கையும் இயற்கையுடன் பாடுபடும் விவசாயியும்!

சுப்பர் மார்கட்டோ, கடை முதலாளியோ இல்லை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...