குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 13, 2022

விவசாயமும் பொருளியலும்

 

பொருளியல் என்பது ஒவ்வொரு தனிநபரும், அரசாங்கமும், நிறுவனமும் தமது முடிவுகளுக்கான அடிப்படையை ஆராய்வதற்கான ஆய்வு முறையாகும்.

ஒருவன் பீட்ஸா இன்று சாப்பிடலாமா என்ற கேள்வி மனதில் எழும்போது சாப்பிடலாம் என்று உறுதிப்படுத்துவதும், மாதக் கடைசியில் சம்பளம் வந்தபிறகு சாப்பிடலாம் என்று அந்த முடிவைத் தள்ளிப் போடுவதும் அவனது பொருளாதாரம் முடிவு செய்கிறது.

தனது பொருளாதாரத்தை ஆராய்ந்து முடிவுகளை எடுத்த பின்னர் அந்த முடிவு அவனது மற்றைய தேர்வுகளை மட்டுப்படுத்துகிறது. உதாரணமாக பீட்ஸா ஆசையினால் உந்தப்பட்டு வாங்கி உண்டால் தனது கல்விக்குத் தேவையான புத்தகம் வாங்க பணம் இல்லாமல் போகலாம்.

ஆகவே ஒருவன் தனது தேர்வுகளை செய்வதற்கு தன்னிடமிருக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையை நன்கு கணிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.

இன்று விவசாயம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் பொருளியல் தெரியாத விவசாய ஆலோசகர்கள் விவசாயத்தை மேம்படுத்துகிறேன் என்று தனியே பயிர்களையும், பயிர்களை வளர்க்கும் முறைகளையும் தெரிந்துகொண்டு தம்மை விவசாய ஆலோசகர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் விவசாய வழிகாட்டிகளால் ஆகும்.

ஒருவன் விவசாயம் செய்யப்போகிறேன் என்று முடிவு எடுத்து தனது சேமிப்பினை முதலிடுகிறான் என்றால் அவன் முதலீடு கூட இல்லாமல் போகக்கூடிய, எதிர் நோக்கப்போகும் அபாயங்கள் இவை

1) பீடைத்தாக்கம்

2) காலநிலை மாற்றத்தினால் அதீத மழைவீழ்ச்சி அல்லது வரட்சி

3) உரத்திற்கான செலவுகள் அதிகரிப்பு

4) பீடைகொல்லிகளுக்கான செலவு அதிகரிப்பு

இவை எல்லாம் தாண்டி உற்பத்தியை உருவாக்கினால் தனக்கு ஏற்பட்ட செலவுகளையே பெற முடியாத படி ஒருவர் வந்து அடிவிலைக்கு வாங்கிச் சென்று கொழுத்த விலைக்கு இலாபத்தைத் தேடும் இடைத்தரகர்.

நேரடியாக விற்கலாம் என்றால் பல இலட்சம் ரூபாய் காரில் வந்து இறங்கி, பீட்ஸாவும், பர்கரும் பேரம் பேசாமல் வாயைப் பொத்தி உண்ணும் பெருந்தகைகள் ரோட்டில் தனது அன்றாட உணவிற்கு விற்பனை செய்யும் ஏழை விவசாயி ஏதோ தங்களை ஏமாற்றி மாடி வீடு கட்டிவிடுவதை ஜாக்கரதையாக தவிர்த்த பெருமையுடன் பேரம் பேசி விலை குறைத்து வாங்கிவரும் பற்றாக்குறை மனமுடைய ஜென்மங்கள்!

விவசாயப் பொருளாதாரம் சரியாக வேண்டும் என்றால் விவசாய உற்பத்திக்குள் அனாவசியமாக திணிக்கப்படும் உள்ளீட்டுச் செலவுகள் நீக்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் விவசாயியினை சுரண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்; வாங்கும் மக்கள் தம்முடைய பகட்டுச் செலவிற்கு கணக்குப் பார்க்காமல் மயங்கி செலவழிப்பவர்கள் தகுந்த விலையைக் கொடுத்து விவசாயியை ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பொருளாதார சிந்தனை செய்யாமல் விவசாய ஆலோசனை செய்கிறோம் என்று படித்ததை வாந்தி எடுக்கும் விவசாய போதனாசிரியர்களை வைத்துக்கொண்டு உருப்படியாக விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்பதும், இது ஒரு விவசாய நாடு என்பதும் ஒரு கற்பனா வாதமே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...