குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 03, 2022

தலைப்பு இல்லை

 

பல போர்களை வென்ற 24ம் புலிகேசி மன்னருக்கு தனக்கு இப்படி எதிர்ப்பு வரும் என்பதை தாங்க முடியவில்லை! நாங்கதானே நல்லாச் செய்தனாங்க! என்று அடிக்கடி மார்தட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக குட்டி போட்ட பூனை போல் மந்திரிமாரை சூழ வைத்துகொண்டு நடந்துகொண்டிருந்தார்!

மந்திரியாரே,

நான் இப்படியான ஒரு எதிர்ப்பை எதிர்பார்க்கவே இல்லையே! ஒற்றர்களாலும் அனுமானிக்க முடியவில்லையே! இதற்கு காரணம் என்ன?

மன்னா, மேற்குலகம் நுட்பமாக மனித மனதின் தன்மையைக் கண்டறிந்து, மனிதனை ஒரு மட்டத்திற்கு மேல் சிந்திக்க விடாமல், இப்படி கிளர்ந்து எழாமல் இருப்பதற்கு அவனது நேரத்தை, சிந்தனை செயலாக்காமல், அதிகாரத்தை ஆட்டம் காணாமல் வைத்திருக்க பேஸ்புக், யூடிப், இப்படி பல சமாச்சாரங்களை உருவாக்கி வைத்திருக்கிறது! எல்லோரும் பிரச்சனை என்று வந்தவுடன் அவற்றை வெளியேற்றி  திருப்திப்படுத்த ஒரு தளம் வேண்டும்! அது அரசை நோக்கி, அதிகாரத்தை நோக்கி இருக்கக்கூடாது; அஜீரணம் வந்தால் வாந்தி எடுப்பதற்கு கொல்லைக்கு ஓடுவதைப் போல்! இப்படி புரட்சிகர எண்ணங்களைக் கொட்டுவதற்கு ஒரு தளம் இருந்தால் அவர்கள் தமது எண்ணங்களைக் கொட்டும் போது நாம் அங்கிருந்தே உளவுப் பணியை ஆரம்பித்து முளையிலேயே கிள்ளி எறியலாம்!

எமது மக்கள் படு சோம்பேறிகள்! சனி ஞாயிறு என்றால் வாகனத்தில் டீசலும், பெற்றோலும் நிரப்பிக்கொண்டு ஊர் சுற்றி, குடி கும்மாளம் நடத்திக்கொண்டு இருப்பார்கள்! எவருக்கும் உற்பத்தி நடக்கிறதா? பொருளாதாரம் எழுகிறதா? வீழ்கிறதா என்ற சிந்தனையெல்லாம் மூளைக்கு நோகும் விஷயங்கள்!

நீங்கள் மின்சாரம், டீசல் இந்த இரண்டிற்கும் குறைபாடு வராமல் பார்த்துக்கொண்டிருந்தால் இவர்களுக்கு இப்படி நாட்டின் பொருளாதாரம் என்ன ஆயிற்று? உங்கள் குடும்பம் என்ன செய்கிறது என்றெல்லாம் நோண்டுவதற்கு நேரம் இருந்திருக்காது!

வீணாக இவை இரண்டிலும் கைவைத்து மக்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள் மன்னா! அதற்கு ஒரு படி மேலே சென்று சமூக ஊடகங்களினை தடுத்து வீணாக சொறிந்து விட்டிருக்கிறீர்கள்!

பலே மந்திரியாரே, இன்றிலிருந்து மக்கள் அனைவருக்கும் மின்சாரமும், டீசலும் குறைவின்றி கிடைக்க எங்கே கடன் வாங்கலாம் என்பதை முதலில் பாரும்! மூடப்பட்ட தெருவிளக்குகள் அனைத்தும் இன்றிலிருந்து வேலை செய்யட்டும்! மின்வெட்டு இருக்கும் என்று முழங்குங்கள்! ஆனால் மின்வெட்டு இருக்கவே கூடாது! மக்களை குஷிப்படுத்துங்கள்! அனைவரும் பேஸ்புக்கிலும், யூடியுபிலும், டிக் டொக்கிலும் மூழ்கட்டும்!

புரட்சிகள் புஸ்வாணமாகட்டும்!

- யாவும் கற்பனை -

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...