குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 17, 2022

இலங்கை உணவுத் தன்னிறைவு அடைவது எப்படி?

 

சுதேச உணவுப்பழக்கத்தை ஊக்குவிப்போம்

********************************************

இந்தத் தொடரின் நோக்கம் நாடு உணவில் தற்சார்பு - தன்னிறைவு உடையதாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமல் தன்னால் உற்பத்தி செய்யப்படுவதை, உண்ணும் பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சோறும் கறியும் உண்ணும் மக்களைக் கொண்டது என்று வாய்ப்பேச்சில் சொன்னாலும் கணிசமான மக்கள் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் வெள்ளைக்காரன் உணவுப் பஞ்சத்திற்கு கொண்டு வந்த கோதுமைக்கு அடிமையாகியவர்கள். இப்படி பஞ்சத்திற்கு பசி தீர்க்க வந்த கோதுமை படிப்படியாக அடிமையாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை உறிஞ்சும் அரக்கனாகி நிற்கிறான்.

எமது அரிசிக் கஞ்சியும், ஒடியல் கூழினையும் தாழ்வான உணவாக கருதிக்கொண்டு பனிஸும், பர்கரும் உயர்ந்த உணவு என்று எண்ணும் மடையர்கள் நாம்!

மானிய உரத்தில் விளைந்த அரிசியும் இனி விலை அதிகரித்து செல்வம் உள்ளவர்கள் உண்ணும் உணவாக மாறப்போகிறது. ஆகவே உள்ளூரில் எந்த உள்ளீடும் இல்லாமல் கிடைக்கும் உணவுப் பொருட்களை எப்படி உணவாக்கலாம் என்ற அறிவு அவசியம்.

அந்த வகையில் இந்த வார அறிமுகம் இராச வள்ளிக் கிழங்கு.

எங்கும் வளரக்கூடியது. உரம், பீடைகொல்லிகள் எதுவும் பாவிக்கத்தேவையில்லை.

இது உழுத்தம் மாவுடன் சீனி, உப்புச் சேர்த்து களியாக, கூழாக மிகச்சிறந்த காலை உணவு. பச்சையாக உண்டால் சுணைக்கும் என்று ஊர்வழக்கில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படை இதில் இருக்கும் Saponin என்ற இரசாயனம் காரணமாகும். இது அவிப்பதன் மூலம் உணவாக உட்கொள்ள முடியும். அவிக்காமல் உணவாக முடியாது.

இதன் மருத்துவ குணங்களாக கீழ்வருவன அறியப்பட்டுள்ளது.

1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

2. இரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

3. உடலைக் குளிர்ச்சியாக்கும்

4. இரத்த ஓட்டத்தை சீராக்கும்

5. மூல நோயினை தணிக்கும்

6. சமிபாட்டினை இலகுவாக்கும்.

7. வயிற்றிலுள்ள பற்றீரியாக்களை சமநிலைப்படுத்தும்

8 உயர் போசனையுடையது

9. உடலை வலிமைப்படுத்தும்.

விவசாயிகள் இதை மேலதிக முயற்சி இன்றி ஊடுபயிராக வரப்புகளில் வளர்க்கலாம்.

உணவு ஆர்வலர்கள்/ஆய்வாளர்கள் இதை சுவையான களியாக, கூழாக எப்படி சமூகத்தில் விரும்பப்படும் உணவாக மாற்ற முடியும் என்று ஆராய்ந்து சந்தைப்படுத்தலாம்.

#myfarmermyfood

#இலங்கையில்_பாரம்பரியஉணவு

#இராசவள்ளி

#வேளாண்_சார்ந்த_தொழில்கள்

#கஞ்சி_கூழ்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...