குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 17, 2022

உணவுப் பதுக்கலும் பஞ்சமும்

 

பட்டினி, பஞ்சம், உணவுப்பற்றாக்குறை பற்றி சரியாகப் புரிந்துகொள்ள அமர்தியா சென் {நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் நிபுணர்} எழுதிய " Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation" என்ற இந்த நூலைப்படிக்க வேண்டும். ஆறு தொடக்கம் பத்தாம் அத்தியாயம் வரை பல்வேறு உலகப் பஞ்சங்களின் அடிப்படைகளை ஆராய்கிறார்.

இதில் ஆறாவது அத்தியாயம் பிரித்தானிய இந்தியாவில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் (1942 தொடங்கி 1948 வரை) எப்படி நாடு முழுவதும் தாக்கியது என்பது பற்றி விபரித்திருக்கிறார். இதன் போது இலங்கையும் பிரித்தானிய இந்தியாவின் ஒருபாகம்தான்.

இதன் சுருக்கம் : இது விவசாய உற்பத்திக் குறைவினால் ஏற்பட்ட பஞ்சம் இல்லை; அரசியல் பொருளாதார நெருக்கடியால் இடைத்தரகர்களான வியாபாரிகள் பொருட்களை பதுக்கி கள்ளச்சந்தை உருவாக்கி பணமுடையவர்கள் மாத்திரம் உண்ண முடியும் என்ற நிலையை உருவாக்க, அரசாங்கம் அதை கண்டும் காணாமல் இருந்துகொள்ள 30 இலட்சம் மக்கள் மாண்டனர். இப்படி இறந்தவர்கள் எல்லோரும் கூலித்தொழிலாளிகள்! பணமுடையவர்கள் எவருக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

ஆகவே பஞ்சம் உருவாகியது வியாபாரிகளின் பதுக்கலாலேயே அன்றி விவசாய உற்பத்தி குறைந்ததால் அல்ல.

இதனால் இந்த நூலாசிரியர் ஒரு முன்மொழிவை வைக்கிறார்; உற்பத்தியாளனுக்கும், நுகர்வோனுக்கும் இடையில் அதிக இடைத்தரகர்கள் இருக்கும் போது இந்தப் பதுக்கல் தீவிரமடைகிறது.

இதனால்தான் உணவுச் சந்தை என்பது உற்பத்தியாளனிடம் நேராக வாங்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் பால்மா, எரிவாயு, எரிபொருட்களில் இப்படியான கள்ளச்சந்தை உருவாகியுள்ளது அவதானிக்கக்கூடிய ஒன்று!

உணவுச் சந்தையில் கள்ளச் சந்தை உருவாகினால் ஏழை, எளியவர்கள் வருமானமற்றவர்கள் ஆபத்தினையும் பஞ்சத்தினையும் நோக்கிச் செல்வார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...