குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 15, 2020

மருத்துவம் பற்றிய அறிவியல் மாயைகள் {Prof. B. M Hegde அவர்களது MEDICAL SCIENTIFIC DELUSIONS கட்டுரையின் சுருக்கத் தமிழாக்கம்}

இன்று அறிவியல் என்பது தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதும் அவற்றின் மூலம் பணத்தினைப் பெறுவது என்பதே. ஆகவே அது மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் வியாபாரமாகவே இருக்கிறது. அறிவியல் பூர்வமானது என்ற வார்த்தை இணைக்கப்பட்டவுடன் அது மிகவும் மதிக்கத்தக்கதாக மாறுகிறது. யாராவது அறிவியல் பூர்வமான வியாபாரத்தைப் பற்றி எதிராகப் பேசியவுடன் அத்தகையவர்கள் அறிவற்றவர்கள், விஞ்ஞானப்பூர்வமானவர்கள் இல்லை, மூட நம்பிக்கை நிறைந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். 

அறிவியலில் புரிதலுக்கான மாதிரியுருக்கள் அனேகமானவை கணித அடிப்படையிலானவை; அவற்றில் சிலது சொற்கள் மூலம் விளங்கப்படுத்தக் கூடியவையாக இருக்கும். அனேகமானவை அப்படி விளங்க முடியாதவையாக இருக்கும். நாம் நினைக்கும், விரும்பும்படி அந்த மாதிரியுருக்களை (mathemetical models) மாற்றிக் கொள்ள முடியும். (இதற்கு பேராசிரியர் கொலெஸ்ரோல் பற்றிய சுவையான கதை ஒன்றினைக் கூறியுள்ளார்) 

1950 களின் மருத்துவ அறிவியல் தத்துவத்தின் (Medical Scientific Philosophy)மிக உன்னதமான விஞ்ஞானி பீட்டர் மெடாவர் அருமையான நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் பெயர் Limits of Science - அறிவியலின் எல்லைகள், இது அறிவியலில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவனும் ஆழமாகக் கற்கவேண்டிய நூல். ஒன்று அல்லது இரண்டு உதாரணங்கள் மூலம் நவீன மருத்துவத்தின் அறிவியல் புனிதத்தன்மையை அறிந்துகொள்ளலாம். 

மருந்தாக்கத் துறையில் (field of pharmaceuticals) எந்தவொரு இரசயான மூலக்கூறும் விலங்கு கலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அறிவியல் கண்டுபிடிப்பாகக் கொள்ளப்படுகிறது. இப்படி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த மூலக்கூறு கீழ்வரும் படிமுறைகள் மூலம் செல்லும்.

1) விலங்குகளில் பலமுறை சோதித்து அவதானத்தைப் பெறுதல்

2) சரியான மூலக்கூறினைப் பெறுதல்

3) மனிதனில் பரிசோதித்துப் பார்த்தல் 

4) பிறகு எழுந்தமானமான கட்டுப்பாடுப் பரிசோதனை

5) இறுதியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தினைப் பெறுதல்

ஆகவே மருந்தாக்க சந்தை தனது சந்தையினைப் பெருப்பித்துக் கொள்ள சமாந்திரமாக நோய்வருவதை தடுக்கும் காரணிகளாக மறைமுக உடல் நல ஆபத்துக்காரணிகளுக்கு என மருந்துகள் தயாரிக்கின்றன. 

தற்போதைய நிலவரத்தின் படி USA இல் 90% மான நாற்பது வயதினை எட்டும் நபர்கள் ஆகக் குறைந்தது 01 ஆபத்துக்காரணியையாவது கொண்டிருப்பார்கள். 60 வயதில் இது 100% ஆபத்துக் காரணிகளைக் கொண்டிருப்பார்கள். இதை “risk factor hypotheses” என்று கூறுவார்கள். 

நாற்பது வயதை எட்டியவுடன் 90% மானவர்கள் தமது ஆரோக்கிய பரிசோதனையின்படி நோயைத் தடுக்கவென்று (கொலெஸ்ரோல் அதிகரித்துள்ளது; மாத்திரை சாப்பிடுங்கள் என்ற} பரிந்துரையின் படி மருந்துக் கம்பனியின் வாடிக்கையாளர் ஆகியிருப்பார். வயது கூடக்கூட அது சக்கரை, இதய நோய் என்று இன்னும் அதிகரித்து முழுவாடிக்கையாளராகும் பொறிமுறை நடக்கும். 

இது மிகவும் பயங்கரமானது; 

தொடரும்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...