குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 27, 2020

மாம்பழமாக இருத்தல்

மாந்தோப்புக்குச் சென்றால் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டேன் மகளிடம்!

மாம்பழம் என்றாள் மகள்

ஏன் பிடிக்கிறது என்றேன்?

மாம்பழம் நாவுக்குச் சுவையானது என்றாள்!

பிடிக்காதது எது என்றேன்?

கீழேயிருக்கும் குப்பை, அழுக்கு, சருகு என்றாள்! 

ஏன் அவற்றைப் பிடிக்காது என்றேன்?

அவற்றில் பாம்பு, பூரான் இருக்கும், பயமாக இருக்கும் என்றாள்! 

அப்படியானால் அப்படி அழுக்கு நிறைந்த மாமரம் எப்படி சுவையான மாம்பழத்தை தருகிறது என்று சிந்தித்தீர்களா? என்றேன்

இல்லையப்பா! என்றாள்

மாமரம் தனது வேர்களை ஆழமாக்கிக் கொண்டு தனக்குரிய நீரையும், போசணையையும் அழுக்கான மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளும், தனது வளர்ச்சியை, சக்தி தரும் சூரியனை நோக்கி வைத்துக்கொள்ளும்! இப்படி எங்கிருந்து எதைப் பெறவேண்டும்? தெளிவான இலக்கினைக் கொண்டிருப்பதால் சுவையான மாம்பழத்தை உருவாக்கும். அழுக்கு என்று மண்ணையும், சருகையும், குப்பையையும் விட்டு விலகுவது இல்லை! அதற்காக அழுக்கான மண்ணுக்குள் புதைந்து விடுவதும் இல்லை! அதன் நோக்கம் சூரியனை நோக்கி வளர்வதுதான்! 

இதுபோலதான் நாமும் எம்மைச் சூழ நடக்கும் தீமைகள், வேதனைகள், எரிச்சல்கள் அனைத்தையும் எமக்கு பாடமாக, அனுபவமாக்கி அந்த உரம்பெற்ற மனதினது துணைகொண்டு சூரியனைப் போன்ற பிரகாசமான அறிவை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். இப்படி அறிவும், அனுபவமும் வளர நாமும் பழுத்து மற்றவர்களுக்கு சுவைதரும் கனிபோன்று பயனுள்ளவர்களாக இருப்போம்! 

ஆகவே மாந்தோப்பில் இருக்கும் குப்பை, சருகு, பாம்பு, பூரானைப் பார்த்து பயந்து விடுவதுபோல் வாழ்க்கையில் நடக்கும் தீமைகள், வருத்தங்களைப் பார்க்காமல் மாமரம் போல் மற்றவர்களும் பயன் தருபவர்களாக இருந்தல் வேண்டும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...