குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 29, 2020

தலைப்பு இல்லை

இன்று காலையிலிருந்து மூன்று இலங்கைத் தமிழ் அரசியல் பற்றிய பதிவுகள் பார்க்க நேரிட்டது; 

மைந்தன் சிவாவின் மனோகணேசன் - ஜனகன் தொடர்பானது!

இரண்டாவது கலாநிதி குருபரனுடையது!

மூன்றாவது சோபிசனுடையது! 

இந்த மூன்று பதிவுகளும் தமிழர்களின் கூட்டு மன நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவாகத்தான் எனது உணர்வில் தெரிகிறது! 

நாம் என்ன செய்கிறோம், சிந்திக்கிறோம் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி ஆழமாக உரையாட வேண்டி இருக்கிறது. 

அரசியல் எதற்காக? 

ஸ்ரீ அரவிந்தர் வந்தேமாதிரம் பத்திரிகையில் அரசியல் விடுதலை பற்றி எழுதியது ஞாபகத்தில் தோன்றியது.

அரசியல் விடுதலை (Political freedom) என்பது தேசத்தின் மூச்சு! 

அது 

1) சமூக சீர்த்திருத்தம், 

2) கல்விச் சீர்திருத்தம், 

3) தொழில் மேம்பாடு, 

4) விழுமிய மேம்பாடு 

ஆகிய அடிப்படையாக இல்லாமல் அரசியல் சுதந்திரத்தை நாடும் சமூகம் அறியாமையின் உச்சத்திலும், பயனற்ற தன்மையிலுமே இருக்கும்; 

இத்தகைய முயற்சிகள் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் தான் தரும். இப்படி (விழுமியமும், தூர நோக்குச் சிந்தனையும் இல்லாமல்) தோல்விகளும் ஏமாற்றங்களும் வரும் போது நாம் அந்தத்தோல்விக்கான காரணம் தேசமும் அதன் கொள்கைகளும் பிழையானது என்ற சண்டைக்குள் செல்கிறோம். 

ஒரு மனிதன் வெற்றிக்கான அடிப்படை நிபந்தனை எதுவென்பதை அறிந்துகொள்ளாமல், தேசியத்தை வளர்ப்பதோ, தேசியத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதோ, பலமானவர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீளுவதோ சாத்தியமில்லை! 

(Bande Mataram, Pg 266) 

நாம் யாருடன் போட்டி போடுகிறோம்? 

எது இலக்கு? 

அதை அடைவதற்கு நாம் எமது சமூகத்தை தயார் செய்கிறோமா? 

மனிதனின் பலம் என்பது பலரது மனம் ஒன்றுபட்டு ஒரு இலக்கினை அடைய முயற்சிப்பதுதான் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

எம்மை ஒருவன் வீழ்த்திவிடுவான் என்ற பயம் பற்றிக்கொள்ளும் போது அந்தப்பயத்தில் நாம் முழுச் சமூகத்தையும் குழப்பி இலக்கினை மறக்கச் செய்கிறோமா? 

வேற்றுக்கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்த்துக்கொண்டு அதைக் கூறுபவனும் நம்மில் ஒரு சகோதரன் என்ற மன நிலையுடன் பிரச்சனைகளை அணுகி வெற்றிபெறுகிறோமா? 

சமூகம் அதை அடைவதற்குரிய சீர்திருத்ததிற்கு, சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறோமா? 

நாம் சிந்திக்கவேண்டிய கேள்விகள்!

அரசியல் சமூகத்திற்கானது! விழுமியத்துடன் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...