குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 19, 2020

யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களின் காலம்

யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் என்று ஈழத்தும் தமிழ் கவிதைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இது கி.பி 1216 – 1621 வரையிலான காலப்பகுதி. அதாவது கி.பி 1044 இல் சோழராட்சி முடிவிற்கு வருகிறது. இதன் பின்னர் பாண்டியரின் துணையுடன் முதலாம் பாராக்கிரமபாகு இலங்கையை ஆட்சி செய்யத் தொடங்குகிறான். பின்னர் 180 வருடங்களின் பின்னர் கலிங்க மாகன் படையெடுப்பு நிகழ்கிறது. 

1215ம் ஆண்டு கலிங்கமாகனின் படையெடுப்பில் இலங்கை அவனது ஆட்சிக்கும் கீழே வருகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு தம்பதெனியாவை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்கிறான். பின்னர் 1251 இல் பாண்டிய நாட்டில் முடிசூடிய சடாவர்ம சுந்தரபாண்டியன் ஏழுவருடங்கள் கழித்து பொலன்னறுவை மீது படையெடுத்து கலிங்க மாகனை விரட்டி தம்பதெனிய இராசதானியிடம் திறை பெறுகிறான். அதன் பிறகு 1284 இல் தம்பதெனிய இராசதானியில் மூன்றாம் பராக்கிரமபாகு முடிசூட பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூடிய பின்னர் இலங்கையை கவனிக்க அனுப்பிய சேனாதிபதியின் பட்டப்பெயரே “ஆரியச்சக்கரவர்த்தி” என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறும். 

இலங்கையின் முதல் பழந்தமிழ் இலக்கிய நூல் மூன்றாவது பராக்கிரமபாகுவின் அவையில் உருவாகிறது. அது ஒரு சோதிட நூல்; சரசோதிமாலை. 

இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் 1284 இல் வட இலங்கையை தமது குடிகளுடன் அரசமைத்து 1621ம் ஆண்டு யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமாகும் வரை பன்னிரெண்டு அரசர்கள் ஆண்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். இந்த பன்னிரெண்டு மன்னர்களும் செகராரசசேகரன், பரராசசேகரன் என்ற பெயர்களை பட்டத்துப் பெயர்களை மாறிமாறிக்கொண்டிருந்தனர். 

1216 – 1450 வரை யாழ் இராசதானியின் தலை நகர் சிங்கை, 1450 -1621 வரை தலை நகர் நல்லூராக விளங்கியது. தலைநகரின் பெயரைக் கொண்டு சிங்கை செகராச சேகரன், நல்லூர் பரராச சேகரன் என்று மன்னர்கள் குறிப்பிடப்பட்டனர். 

இந்தப் பன்னிரு மன்னர்களில் சிங்கை செகராரசசேகரன் (1380 – 1414) மற்றும் நல்லூர் பரராசசேகரன் (1478 – 1519) ஆகிய இருமன்னர்களும் சிறந்த அறிஞர்கள். இவர்களது ஆட்சிக்காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றியது. அக்காலத்தில் அறிவியல் இலக்கியங்கள் என்று கருதப்படக்கூடிய சோதிடம், மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகள் வளர்ச்சியடைந்து காணப்பட்டது.

சிங்கைச் செகராசசேகரனின் ஆட்சியில் தோன்றிய வைத்திய நூல் செகராசசேகரம்.

நல்லூர் பரராசசேகரன் காலத்தில் தோன்றிய வைத்திய நூல் பரராசசேகரம். 

இவை இரண்டுமே இன்று நூறுவருடங்களுக்கு முன்னர் ஏழாழையில் வாழ்ந்த ஐ. பொன்னையாப்பிள்ளை எனும் பெருந்தகையால் எல்லோருக்கும் கிடைக்கும்படி பதிப்பிக்கப்பட்ட மன்னர் காலத்தைய வைத்திய நூல்கள்.

உரையைக் கேட்க கீழ்வரும் Youtube channel இல் இணைந்திருங்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...