குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 05, 2020

சூக்ஷ்மத்தின் பலம்

சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை ஸ்தூலத்தை விட சூக்ஷ்மம் வலிமையானது. ஆகவே நோய்க்கான காரணம் சூக்ஷ்மத்திலிருக்கிறது. அந்த சூக்ஷ்மத்தைப் புரிந்து கொள்ள மனிதனின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை தமது தியான சாதனையால் மனதை நுண்மையாக்கி புரிந்து கொண்டதை மூலதத்துவமாக்கித் தந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். 

மனிதனின் சூக்ஷ்மத்தன்மையினை புரிந்துக் கொள்ள முடியாதவன் பிணி தீர்க்க முடியாது! சித்த ஆயுர்வேதத்தின் ஆழம் ஸ்தூல உடலைத் தாண்டி மனிதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பதில் இருக்கிறது. இன்று நவீன அறிவியல் இதை புரிய கருவிகள் மூலம் முயன்றுக் கொண்டிருக்கிறது. 

இன்று கொரோனோ வைரசைப் பற்றிய கட்டுரை படிக்க நேரிட்டது. ஒரு மனிதன் கொரோனோ positive என்று காண்பிக்க அவனது உடலில் 70 பில்லியன் வைரசுகள் இருக்க வேண்டும். இந்த 70 பில்லியன் வைரசுகளின் நிறை 0.0000005 கிராம், ஆக ஒரு வைரசின் நிறை 0.85 attogram (0.000,000,000,000,000,000,85 gram), தற்போது 03 மில்லியன் மக்களுக்கு நோய் ஏற்படுத்திய மொத்த வைரசுகளின் நிறை 1.5 கிராம் மட்டுமே! 

ஆக 1.5 கிராம் எடை வைரசுகளுக்கு இவ்வளவு பலமா? ஆம் வெளியே ஸ்தூலமான உலகம் மட்டும் தான் உண்மை என்று கற்பனை செய்துக் கொண்டிருக்கும் மனிதனின் அறியாமையால் இத்தகைய நுண்மையான கிருமிகள் பலம் பெறுகிறது என்று கொள்ளலாம். 

ஆகவே இப்படி சூக்ஷ்மமான வைரசு இவ்வளவு தாக்கம் தருமென்றால் அதைவிட சூக்ஷ்மமான உயிரின் - ஆன்மாவின் அளவு பற்றி திருமூலர் இப்படிக் கூறுகிறார்;

"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''

(திருமந்திரம், சீவன், பா.2011)

அதாவது ஒரு பசுவின் மயிரினை நூறாகப் பிரித்து (0.001) அதைப் பிறகு ஆயிரமாக பகுத்து (0.000,01), அந்தக் கூறை நூறாயிரம் ஆக்கினால் வரும் அளவு ஆன்மாவின் அளவு என்கிறார். பசுவின் மயிரின் அளவு 0.01 மில்லி மீற்றர் என்றால் உயிரின் அளவு. 0.000,000,000,01 மில்லி மீற்றர்

ஆன்மாவின் அளவு 0.000,000,000,01 மில்லி மீற்றர்

COVIND - 19 இன் அளவு 0.000,000,125 மில்லி மீற்றர்

ஆக COVID - 19 உயிரை விட 12500 மடங்கு பெரியது! 

ஆகவே 80 கிலோ உள்ள ஸ்தூல உடலை மிகச் சூட்சுமமான வரைசுகள் கட்டுப்படுத்தினால் வைரசுகளை கட்டுப்படுத்த அதை விட 12500 மடங்கு நுண்மையான உயிரின் ஆற்றல் பயன்படலாம் அல்லவா? 

ஆகவே சூக்ஷ்மமான உயிரின் ஆற்றலைப் பயன்படுத்த மூலதத்துவமும், மனிதன் என்ற பிண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தத்துவமும் புரிந்திருக்க வேண்டும்! 

{இந்தப்பதிவு சித்தர் பாடல்களில் கற்றறிந்தவற்றை சிந்தித்து ஒப்பிட்டு கருதுகோள்களையே முன்வைக்கிறது; ஆகவே அறிவியல் கதைக்கிறோம் என்று விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் முன்வைக்க வேண்டாம்; ஆக்கப்பூர்வ கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.}


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...