குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 09, 2020

தமிழும் சமஸ்க்ருதமும்

நண்பர் Kandasamy Jeyandran அவர்கள் நாம் புத்தி என்ற சொல்லிற்கு கூறிய விளக்கத்தை கேள்விக்குட்படுத்தினார். அவரது கேள்விக்கணைகளுக்கான பதிலே நீண்ட பதிவாகிவிட்டதால் இங்கு தொகுத்துள்ளோம்.

*************************

தமிழும் சமஸ்க்ருதமும் நாத்திகம் கதைப்பவர்களுக்கும், குழப்ப வாதிகளுக்கும் வேறாகவும் பிரித்துப் பார்த்து வீண்வியாக்கியானம் செய்து குழப்பம் தரும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் யோக மரபில் இத்தகைய சிந்தையுடன் அணுகுபவர் யோக சாத்திரம் பற்றிய உண்மையான அறிவினைப் பெற முடியாது, 

ஆகவே இந்தப்பதிவு தமிழும் சமஸ்க்ருதமும் யோக சாஸ்திர அடிப்படையில் அதிமுக்கியமானவை என்பதைப் பற்றிக் கூறும். அரசியல், சமூகவியல் பார்வையைப் பற்றி உரையாடுவது இதன் நோக்கம் இல்லை. 

குறிப்பாக நூறாண்டுகளுக்கு முந்தைய யாழ்ப்பாண சைவ மரபும், தமிழ் அறிஞர்களும் இதைத் தெளிவாகப் புரிந்து வந்திருந்தனர்; பழைய சைவப் பண்டிதர்கள் தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்ணென்றே கொண்டு அறிவைப் பெற்றிருக்கிறார்கள். இதற்கு கந்தபுராணத்திலேயே சான்றிருக்கிறது.

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப

இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பும்

இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்

விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ

அவரது விவாதம் புக்தி என்று சமஸ்க்ருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லுக்கான விளக்கம் புத்தி என்ற சொல்லிற்கு எப்படி சரி என்பதாகும். 

தொல்காப்பியச் சூத்திரத்தில், எச்சவியலில்

குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் (453)

குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல (454)

ஒரு சொல்லுக்குத் தலை, இடை, கடை என மூன்று இடம் உண்டு. அம்மூன்றினுள் ஒன்றை எவ்விடத்துக் குறைக்க வேண்டுமோ, அவ்விடத்தை அறிந்து குறைத்துச் சொல்லிப் பாவிக்கலாம்.

சமஸ்க்ருதத்தில் புக்தி என்ற உச்சரிப்பில் வரும் சொல் தமிழில் புத்தி என்று பயன்படுத்தலாம்; ஏன் புந்தி என்றும் பயன்படுத்தலாம் (புந்தியில் வைத்தடி போற்றுக்கின்றேன் - திருமந்திரம் காப்புச் செய்யுள்) முக்தி என்று வரும் சொல் முத்தி என்று பயன்படுத்தலாம், பக்தி என்று வரும் சொல் பத்தி என்று பயன்படுத்தலாம்.

இதை மொழியில் உழற்சி (free variation) என்று கூறுவார்கள். இரண்டு சொற்களும் உச்சரிப்பில் வேறுபாட்டைத் தந்தாலும் பொருள் ஒன்றாகவே இருக்கும்.

ஆகவே உழற்சிக்குரிய இலக்கணம் தெரிந்த ஒருவரால் சமஸ்க்ருதத்தில் புக்தி என்று உச்சரிக்கப்பட்ட சொல்லின் உண்மை விளக்கமான விழிப்படைந்த அறிவு என்பதை புத்தி என்ற தமிழ்ச் சொல்லிற்கும் பொருள் சொல்ல முடியும். புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல் புத்தியாகியிருக்கலாம்; புத்தி என்ற தமிழ்ச் சொல் புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல்லாயிருக்கலாம்.

இங்கு புத்தி தமிழ்ச் சொல்லா சமஸ்க்ருதச் சொல்லா என்று ஆராய்ந்து கொண்டிருப்பது மாமரத் தோட்டத்திற்கு போய் சுவையான பழத்தை சுவைக்காமல் இலை எத்தனை, வேர் எங்கு போகிறது என்று வீண் ஆராய்ச்சி செய்யும் அறிவாளியின் வேலை;

புத்தி என்ற சொல்லின் விளக்கம் ஒரு யோகசாதகனுக்குப் பயன்படும் விதத்தில் இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி உரையாடுவதை விட்டு விட்டு சொல்பிறப்பியல் ஆராய்ச்சி இங்கு கனியிருக்க இலை எண்ணும் வேலை!

தமிழைப் போற்றுகிறோம் என்று சமஸ்க்ருதத்தை தூற்றுவதும், உணர்ச்சிவசப்படுவதையும் விட தமிழ் இலக்கண மூல நூற்களை முறையாக கற்றால் சொல் எப்படி உருவாகிறது என்ற தெளிவு உண்டாகும்.

தமிழ் மேல் பற்று என்பது தமிழை ஆழமாகக் கற்பது; உணர்ச்சிவசப்பட்டு போற்றுவதும் சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதும் அல்ல! எல்லா மொழிகளும் அழகானவை! அந்த அழகை இரசித்து எமது அகத்தை செம்மைப்படுத்த வேண்டும்!

பற்று, கடும் பற்று, உணர்ச்சிகள் இவை உள்ளதை உள்ளபடி பார்க்கவிடாது! மனதை குழப்பி அறிவைத் தடுக்கும்; அறிவை வேண்டுபவர் தெளிந்த, திறந்த மனதுடன் இருக்க வேண்டும்; எந்தப் பற்றுக்களிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது! எமது அறிவிற்கு விருந்து தமிழிலும் உண்டு, சமஸ்க்ருதத்திலும் உண்டு, ஆங்கிலத்திலும் உண்டு! மொழி அறிவைக் காவும் ஊடகம்! மொழியைப் பயன்படுத்தி நாம் எமக்குள் அறிவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ஓடத்தில் பயணிப்பதை இரசிக்காமல் ஓடத்தை தலையில் ஏற்றினால் வீண் சுமை தான்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...