குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 16, 2020

சிங்கம் நரியும்

பொதுவாக சிங்கம் காட்டின் ராஜாவாகவும் நரி குள்ளத்தனம் செய்யும் சதிகாரனாகவும் பழங்கதைகளில் சொல்லப்படுகிறது. இப்படி உருவகப்படுத்த கதைசொல்லிகள் அவற்றின் நடத்தையியலை கூர்ந்து கவனித்து அவதானித்திருக்க வேண்டும். 

சிங்கத்தின் வேட்டை நடத்தை (hunting behavior) தனித்துவமானது. சிங்கம் தனது உணவிற்காக பெருமளவு உழைப்பைத் தரும் தன்மையுடையதல்ல! தனது எல்லையை வலிமையாக வரையறுத்துக்கொள்ளும். மேலும் அது வேட்டையாடும் இரையைத் தாக்க முன்னர் அது பாயப்போகிறது என்பது இரைக்குத் தெரியும் வகையில் காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையிலிருந்து தாக்கும். மேலும் ஒரு இரையைக் குறிவைத்து ஓடத்தொடங்கினால் வேறு இரையில் கவனம் வைக்காத ஏகாக்கிரம் உடையது. பாதையை மாற்றாதது. இரைத் தப்பிவிட்டது என்றால் உடனடியாக வேறு இரைக்கு குறிவைக்காது. மீண்டும் தனது எல்லைக்குள் வந்து அடுத்த இரையைக் குறிவைக்கும். ஆண்சிங்கங்கள் ஆகச்சிறிய முயல் போன்றவற்றினை பெரும்பாலும் குறிவைக்காது. 

சிங்கம் எப்போதும் சிங்கிளாத் தான் வேட்டைக்குப் போகும். ஒருவேளை கூட்டமாகப் போகும் சந்தர்ப்பம் வந்தால் தமது கண்பார்வையால் யார் இரையைத் துரத்தப்போகிறோம் என்பதை அறிவித்துவிட்டு ஒருதிசையில் மாத்திரம் அந்தக்கூட்டத்தின் ஒரு சிங்கம் இரையை நோக்கிப் பாயும். மற்றவை பதுங்கிப் பாய்ந்து இரையைப் பயமுறுத்தும். தலைமை ஏற்று வேட்டையை நடத்தும் சிங்கத்தைப் போட்டி போட்டு குழப்பாது. வேட்டைச் சிங்கத்தின் தலைமைத்துவத்தை வேட்டை முடியும் வரை பொறுமையாக உதவி செய்யும் வகையில் காத்திருக்கும். மேலும் வேட்டை நடத்தையை மாற்றாது! 

ஆக சிங்கத்தின் நடத்தை தரும் தலைமைப் பண்பு;

1) எதை நோக்கியும் அலைந்து திரியும் பழக்கம் இல்லை; தனது எல்லையை வகுத்துக்கொண்டு வேட்டையை நிகழ்த்தும்.

2) வேட்டையாடப் போகும் இரையை நம்பவைத்து கழுத்தறுப்பதில்லை; பாயுமுன்னர் இதோ நான் உன்னைக் கொல்லப்போகிறேன் என்பதை அறிவித்துவிட்டு முடியுமானால் தப்பித்துக்கொள் என்று நடத்தைக் காட்டி வேட்டையாடும். 

3) ஒரு தடவை குறித்த இரையைப் பிடிப்பது என்று முடிவு செய்து விட்டால் அதன் பேச்சை தானே கேட்காது.      

4) தனது தகுதிக்கு குறைந்த சிறிய இரைகளை ஆண்சிங்கங்கள் குறிவைப்பதில்லை.

5) ஆண் சிங்கம் சிங்கிளாகத்தான் போகும்.   

6) ஒரு சிங்கம் குறிவைத்த இரையில் மற்றைய சிங்கங்கள் குறிவைக்காது. வேட்டையாடும் சிங்கத்திற்கு cover up position கொடுத்து உதவும். 

இவையெல்லாம் இன்று தனிமனித வெற்றிப்பாடங்களாக போதிப்பதால் தான் அந்தக் காலத்து மனிதர்கள் சிங்கத்தின் நடத்தையில் அறிந்தவற்றை அரசனுக்கு தலைவனுக்கு ஒப்பிட்டார்கள்! 

அடுத்து நரி பற்றிப் பார்ப்போம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...