குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 10, 2020

சைவ சித்தாந்தமும் குண்டலினி யோகமும்

சைவ சித்தாந்த நூலாகிய சிவ ஞானசித்தியார் சுபக்கத்தில் வரும் 299 & 300 வது பாடல்கள் திருவைந்தெழுத்தால் செய்யப்படும் குண்டலினி யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
299 வது பாடலின் பொருள் வருமாறு; 
திருவைந்தெழுத்து ஆன்மாவிற்கு அரனுடைய பரிசு
ஏனென்றால் அது அரனாகிய சிவனின் உருவம் திருவைந்தெழுத்தாலேயே அமைந்திருக்கிறது என்பதை அறிந்து அந்த திருவைந்தெழுத்தால் அங்க நியாசம், கர நியாசம் செய்து, ஆன்மாவின் ஐந்தெழுத்தால் இதயத்தில் அர்ச்சித்து, அதே ஐந்தெழுத்தால் குண்டலினி அனலை விழிப்படையச்செய்து, குண்டலினி எழுந்து செல்லும் முதுகுத்தண்டு வழி உணர்வைச் செலுத்தி (அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) திருவைந்தெழுத்தை உச்சரிக்க சந்திர மண்டலம், சூரிய மண்டலம், அக்னி மண்டலத்தினூடாக அரவம் என்ற குண்டலினி தோன்றும், இப்படித்தோன்றும் போது ஆன்மாவில் அரனாகிய சிவம் தெரியும். 
இனிப்பாட்டினைப் பார்க்க; 
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் 
அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு) 
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி 
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து) 
அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி 
அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) 
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் 
அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே. 299 
இதில் இரண்டு விஷயங்கள் குருமுகமாய்த் தெரிந்துகொள்ள மறைப்புச் சொல்லியுள்ளார்;
1) ஆன்மாவின் ஐந்தெழுத்து
2) ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...