குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 17, 2020

உயர்ந்த அறிவினைப் பெறுவதற்கான பண்புகள்

முற்காலத்தில் உயர்ந்த அறிவினைப் (மேதாசக்தியைப்) பெறுவதற்காக குருவிடம் செல்லும் மாணவர்கள் தமது மனதினை அமைதிப்படுத்தி சாதனையில் முன்னேற சாந்தி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது. 

இது மேதா சகதியைப் பற்றி உரையாடும் மகா நாராயண் உபநிஷதம், சுவேதாசுவர உபநிடதம் ஆகிய இரண்டினது சாந்தி மந்திரமாக வருகிறது. 

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் கற்பித்தலும், கற்றலும் நிகழவேண்டும் என்றால் நிகழவேண்டிய அமைதிக்கான நிபந்தனைகளைக் கூறுகிறது. 

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

இதன் பொருள்;

ஆசிரியர் மாணவர்கள் இருவரையும் இறைவன் காப்பாராக!

நாம் இருவரும் அறிவின் ஆற்றலை அனுபவிப்போமாக!

நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!

நாம் இருவரும் கற்றது எமக்கு பயனுள்ளதாகட்டும்!

எதற்காகவும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷம் கொள்ளாமல் இருப்போமாக!

இந்த மந்திரம் ஆசிரியர் மாணவர் இருவருக்குமிடையிலான ஒப்பந்தம். இருவருக்கும் தமக்கு மேல் ஒருவர் - இறைவன் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். குரு தன்னை எல்லையற்ற கடவுளாக சிஷ்யனுக்குக் காட்டி ஏமாற்றி அறியாமையில் தள்ளக்கூடாது. சிஷ்யன் குரு தனது இச்சைகளை எல்லாம் பூர்த்தி செய்யக் கிடைத்த ATM என்று நினைக்கக்கூடாது என்பது இந்த வரியின் பொருள்!

அடுத்த "ஸஹ" என்ற சொற்கள் மூன்று தடவை பாவிக்கப்பட்டுள்ளது. இது இருவரும் சேர்ந்தே பொறுப்புக் கூறல் வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கிறது. 

சரியான விஷயத்தை ஆசிரியன் கற்பிக்க வேண்டும், கற்பித்தல் ஆசிரியர் கடமை என்றால் அதை கற்றல் மாணவனின் கடமை! இதற்கு இருவரும் சேர்ந்து ஆற்றலுடன் உழைக்க வேண்டும். அந்த உழைப்பில் வரும் கல்வியின் பலன் இருவருக்கும் பலனுள்ளதாக இருக்க வேண்டும். அந்தப்பலனை இருவரும் அனுபவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். 

இறுதியாக மிக முக்கியமான விஷயம் "எக்காரணம் கொண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷித்துக் கோபம் கொள்ளக்கூடாது" என்பதாகும். 

பலர் தாம் நினைத்தது சாதனையில் நடக்கவில்லை என்றவுடன் குருவின் தகுதியை சந்தேகிப்பதும், குருவைக் கேள்வி கேட்பதும் என்றவாறு தமக்குள் விரோத பாவம் வளர்த்து சிக்கலாக்கிக் கொள்வார்கள். குரு தகுதியற்றவர் என்றோ, அவரிடம் நமக்கு பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால் எந்தவித விரோத பாவத்தையும் மனதில் தோற்றுவிக்காமல் விலகிவிடும் மாணவன் மனதில் சாந்தியுடன் கற்கும் ஆற்றலைப் பெறுவான்.

மேலேயுள்ள மந்திரம் கற்றலுக்குரிய முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகிறது;

1) இருவரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இருக்கக் கூடாது; தமக்கு மேலே அல்லது அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற பணிவும் எண்ணமும் இருவருக்கும் இருக்க வேண்டும். 

2) கற்றலில் ஆசிரியனுக்கும், மாணவனுக்கும் புரிந்துணர்வும், ஒருவரை ஒருவர் போஷிக்கும் தன்மை இருக்க வேண்டும். 

3) இருவரும் இணைந்து ஆற்றலுடன் சிரத்தையுடன் முயற்சிக்க வேண்டும். 

4) இருவருடைய முயற்சியும் இருவருக்கும் பயன் தரவேண்டும். 

5) எக்காரணம் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் துவேஷம் கொண்டு தமது மனதை அழுக்காக்கிக் கொள்ளக்கூடாது. இது கற்றலை நிறுத்தி விடும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...