குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 15, 2023

STEM கல்வி வளர்ச்சியை எப்படி அமுல்படுத்துவது - சில சிந்தனைகள்

மலையகத்தில் STEM கல்வி முன்னேற்றத்தை Dr. Kumaravelu Ganesan Dr. Nava Navaratnarajah Dr. Nishānthan Ganeshan ஆகியோர் STEM-Kalvi ஊடாக முன்னெடுக்கிறார்கள். மாத்தளை பாடசாலை அதிபர்கள் குழுவில் பகிர்ந்து கொண்ட சில சிந்தனைகள் அனைவருக்குமாக! 
அதிபர்களே, ஆசிரியர்களே 
நாம் மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்கு சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றை நான் இங்கே கீழே பட்டியலிட்டுள்ளேன். 
இது தொடர்பாக உங்கள் பாடசாலை விஞ் ஞான, தொழில் நுட்ப ஆசிரியர்களுடன் மேலதிகமாக கலந்தாலோசித்து அறிவுரைகளை வழங்கக் காத்திருக்கிறோம். 
இயற்கை அறிவியல், உயிரியல், பௌதீகவியல், கணிதம், புள்ளிவிபரவியல், சமூக அறிவியல், அரசறிவியல், பொருளியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பரந்த பொருளில் நாம் அறிவியலை - விஞ்ஞானத்தைக் குறிப்பிட முடியும். 
மேற்குறித்த துறைகள் அனைத்திலும் அறிவைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முறை அறிவியல் முறை - scientific methods என்று சொல்லப்படுகிறது. 
நாம் ஏன் அறிவியல் முறைகளை படிக்க வேண்டும்? விஷயங்கள் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, கணிப்புகளைச் செய்வது நடகப்போவதைக் கணிப்பது மற்றும் தவறுகளைத் தடுப்பது மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நம்பகமான முறை அறிவியல் முறையாகும். இந்தச் சிந்தனை மாணவர்களிடையே தூண்டப்பட வேண்டும். 
ஆராய்ச்சியில் மிக முக்கியமான கருவி எப்போதும் மனிதனின் மனதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை (பெவரிட்ஜ், 1957). ஹக்ஸ்லியின் (1863) கூற்றுப்படி, விஞ்ஞான விசாரணையின் முறை மனித மனதின் செயல்பாட்டின் வெளிப்பாடே தவிர வேறில்லை. 
விஞ்ஞான முறை என்பது அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்து அறிவைப் பெறும் முறையாகும். 
விஞ்ஞான முறை என்பது நிகழ்வுகளை ஆராய்வதற்கும், புதிய அறிவைப் பெறுவதற்கும், அல்லது முந்தைய அறிவை சரிசெய்து ஒருங்கிணைப்பதற்குமான நுட்பங்களைக் குறிக்கிறது (Goldhaber and Nieto 2010).
நியுட்டனின் கருத்துப்படி ஒரு அறிவு விஞ்ஞானம் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு விசாரணை முறையானது, குறிப்பிட்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு உட்பட்டு கவனிக்கத்தக்க, அனுபவபூர்வமான மற்றும் அளவிடக்கூடிய ஆதாரங்களை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் (நியூட்டன், 1726).
விஞ்ஞான முறை என்பது முறையான பரிசோதனை, அவதானிப்பு, அளவீடு மற்றும் உருவாக்கம், சோதனை மற்றும் கருதுகோள்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கொண்ட செயல்முறைகளின் தொகுப்பாகும்.
இப்படியான சிந்தனை முறையை நாம் மாணவர்களிடையே வளர்க்க முடியுமா? அதற்கு என்ன செய்ய முடியும்?
அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...