குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 14, 2023

அரசியல்

செய்தி: கடும் கோபமடைந்த ஜனாதிபதி! சில மணி நேரங்களில் பதவி விலகிய தொல்பொருள் பணிப்பாளர்
ஜனநாயக அரசியல் அமைப்பில் பெரும்பான்மையே அதிகாரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தப் பெரும்பான்மை என்ன குணத்தைக் கொண்டிருக்கிறதோ அந்த குணத்திற்கமையவே அரசும் அதன் அதிகாரமும் செயற்படும். உச்சத்தில் இருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ தன்னிச்சையாக தாம் விரும்பிய படி செயற்பட முடியாது. 
இந்த அடிப்படை உண்மையை விளங்காத சிறுபான்மையினர் எப்போதும் தமக்குரிய அபிலாசைகளைப் பெற முடியாது. சிறுபான்மை அரசியல்வாதிகள் தங்களை ஹீரோக்களாக படம் காட்டுவதை நிறுத்தி விட்டு பெரும்பான்மை சமூகத்தை தமக்காக சிந்திக்கும் மனப்பாங்கினை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற உளப்பூர்வ செயல்களில் ஈடுபட வேண்டும். 
உளச்சுத்தமாக பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய வகையில் தீர்க்க வேண்டும் என்றால் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்யும் புத்திசாலித்தனம் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்பதை நாம் கேட்க வேண்டும். 
தொல்லியல் ஆணையாளரை தமிழ் கூட்டமைப்பு எம் பிக்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு பகிரங்கமாக கேள்வி கேட்பது தமிழர்களுக்கு கிளு கிளுப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாம் நாம் சிந்திக்க வேண்டியது மற்றைய பக்கத்தை! இதைச் சாக்காக வைத்து பெரும்பான்மை மக்களின் மனதை எப்படித் தூண்டி அரசியல் இலாபம் காணலாம் என்பது! 
தொல்லியல் ஆணையாளரை தமிழ் எம்.பிகளுக்கு முன்னால் வைத்துக்கொண்டு அவமானப்படுத்துவது போல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு நன்றாக குளோஸப்பில் வைத்து வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் பெரும்பாலான சிங்கள மக்களை மீண்டும் தேவையற்ற சிந்தனைக்குத் தூண்டுகிறார் ஜனாதிபதி! 
அவர் உண்மையிலேயே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான்கு சுவருக்குள் கூப்பிட்டு Left & right வாங்கி முடிவை எடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். தொல்லியல் director general ஐ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக்க ஜனாதிபதி முயற்சிக்கிறாரா? 
அண்ணன் மனோகணேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ்பௌத்தத்தை சம நிலைக்கு ஒரு உத்தியாக பயன்படுத்த எண்ணுகிறார்கள். 
தமிழ் பௌத்தத்திலிருந்து சிங்கள பௌத்தத்தை பிரித்து தனித்தன்மையை உருவாக்கும் அடித்தளத்தை அனாகரிக தர்மபால ஆழமாகச் செய்து வைத்திருக்கிறார்; அதிலிருந்துதான் சுதந்திரத்திற்கு பின்னைய சிங்களத் தலைவர்கள் அனைவரும் செயற்படுகிறார்கள். அதன் கட்டமைப்புகளை சரியாகப் புரியாமல் வெறுமனே தமிழ் பௌத்தம் என்ற சொல்லாடலை எடுப்பது எந்தப் பலனையும் தராது. இன்னும் எதிர்ப்பை பிரச்சனையைப் பெரிது படுத்தலாம். 
எவரையும் உசுப்பேத்தாத எல்லோரையும் புரிந்துகொண்டு நம்பிக்கையைக் கட்டமைத்துச் செல்லக்கூடிய முதிர்ச்சியுடைய உறுதியான தலைவரே தேவை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...