குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 12, 2023

மாணவருக்கு கடிதம் # 01

எனது மாணவர் ஒருவருக்கு எனது நூல்கள், சிந்தனைகள் தனது தொடர்பில் இருக்கும் சமூகப் பிரபலங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று பெருவிருப்பம். இதுபற்றி எனது சிந்தனையை அவருக்கு நான் அனுப்பினேன். இங்கும் பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்தையும் சொல்லலாம். 
_____________________________________________
அன்புக்குரிய மாணவரே
உங்கள் குருவின் சிந்தனைகள் சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற முயற்சிக்கு நன்றி! எனது அன்பும் உரித்தாகட்டும். 
குருதேவர் கண்ணைய யோகீஸ்வரர் கூறுவார் - என் மாணவன் எந்தக் காரியம் செய்தாலும் அதை ஏன் செய்கிறோம் என்று சிந்தித்து செயலாற்றுபவனாக இருக்க வேண்டும்! 
உங்கள் விண்ணப்பம் தொடர்பாக எனது மனதில் பட்டவற்றை உங்கள் சிந்தனைக்கு கீழே தொகுத்துள்ளேன்; 
நீங்கள் நூறு புத்தகங்கள் இப்படி இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுத்தால் அதில் ஒன்று இப்படிப் பிரபலமானவர்களுக்கு கொடுக்கலாம். மிகுதி எதிர்காலச் சந்ததியினரான இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும். பிரபலமானவர்கள் எப்போது தமது துறையில் உச்சம் அடைந்துவிட்ட பூரிப்பில் இருப்பவர்கள்; மரியாதை நிமித்தம் இவற்றை ஏற்றுக்கொள்வார்கள்; அதேவேளை தமது பிரபலத்துவத்தை நல்லது நடக்க பயன்படுத்துதற்கு அஞ்சுவார்கள். 
உதாரணம் ஒரு பெருந் தலைவர் நினைத்தால் எத்தனையோ இலட்சம் மக்களை நல்வழிப் படுத்த முடியும்! ஆனால் அவர்கள் சிந்தனை முழுக்க தான் தனது வியாபாரத்தைப் பெருக்குவது, புகழை அடைவது என்ற சிந்தனையிலேயே இருக்கும். நீண்ட ஆயுள் பெறலாமா? இன்னும் எப்படி பெயர், புகழ் பெறமுடியும் என்றே சிந்தனை ஓடும்; பொதுவாக இறைவன் எம்மை வாழ்வில் உயர்த்துவது அவனது தொழிலாகிய மற்றைய ஆன்மாக்களை உயர்த்த நாம் பெற்ற உயர்வு, பணம், ஆற்றல் என்பவற்றைப் பயன்படுத்துவோம் என்ற எண்ணத்தில்; ஆனால் அதிகாரம், பணம், புகழ் அடைந்தவர்கள் இலகுவில் அதை மற்றவர்களுக்காகச் செய்ய மாட்டார்கள்; அப்படிச் செய்தாலும் அதற்குள் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்ற எண்ணமே இருக்கும்,. 
நாம் அன்பாகக் கொடுப்பதையும் இவன் எனது பிரபலத்துவத்தை வைத்து தன்னைப் பிரபலமடையப் பார்க்கிறானோ என்ற சந்தேகத்துடனேயே பார்ப்பார்கள். 
இப்படிப் பிரபலமானவர்களுக்குக் கொடுப்பதை விட நாம் எதிர்காலச் சந்ததியினரின் சிந்தனையை மாற்ற, உத்வேகப்படுத்த இளைஞர்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு, உங்கள் அலுவலகத் தோழர்களுக்கு கொடுத்து அதனால் அவர்கள் ஆர்வமுற்று அவர்கள் எமது சிந்தனையால் பயன்பெற்றால் அதுவே உண்மையான நன்மை! 
உண்மையான குருபணி களத்தில் தேவையானவர்களுக்கு நாம் இவற்றைக் கொண்டு சேர்க்கிறோமா என்பதே! 
இப்படிப் பிரபலமானவர்கள் தம்மைப் புகழ்வதையும், மதிப்பதையுமே அதிகம் விரும்புவார்கள்! 
இத்தகையவர்களை நாம் கந்தர்வ சத்துவ குணம் உடையவர்கள் என்று சொல்லுவோம்; அவர்களைத் திருப்திப்படுத்த அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டும். 
அவர்கள் விரும்பாததைத் திணிக்கும் போது அவர்கள் எண்ணச் சுழல்கள் எம்மைப் பாதிக்கலாம்! 
இதுவும் மோக நாசன சாதனையின் ஒரு அங்கமாக தேவி தரும் ஞானமாக ஏற்றுக்கொள்ளவும்! 
உண்மையான குரு பணி என்ன என்பதை ஆழமாகச் சிந்திக்கவும்! நான் விரும்புவதைச் செய்வதல்ல! தேவையானதைச் செய்வது! 
நான் எழுதுவது ஒரு ஆத்மார்த்த குரு பணி! இதன் மூலம் எனக்கு என்ன நன்மை என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை! மற்றவர்களது சிந்தனையை தெளிவிக்க குரு இட்ட பணியைச் செய்கிறேன்; இது தேவையானவர்களுக்கு சென்றடைய வேண்டும். 
அன்புக்குரிய மாணவனாக இந்தப்பணியை முன்னெடுக்க நீங்கள் மேற்கூறிய வழியில் செயற்படுவீர்கள் என்று நம்புகிறேன். 
இதை வாசித்து சிந்தித்து பின்னர் அழைக்கவும்
அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...