குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 02, 2023

பயணம்

நேற்று கண்டி நகரை கால் நடையாக வலம் வந்தாயிற்று! 
மகளுடன் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்றேன். மகளின் நண்பர்கள் எல்லோரும் சென்று விட்டார்களாம். அப்பா இந்தியாவில் உள்ள எத்தனை கோயில்களுக்கும், இடங்களுக்கும் போய் வந்த நான் பக்கத்தில் கண்டியில் இருக்கும் தலதா மாளிகைக்கு இன்னும் செல்லவில்லை. இந்த விடுமுறைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று உறுதியாக நின்று ஒரு மாதிரி சாத்தியமாகிற்று!
இருவரும் புனித தந்தத்திற்கு நீலோற்பல மலர் சமர்ப்பித்தோம். இந்த மலர் இரவில் மூடி தினசரி காலையில் திறக்கும் இயல்பு உடையது. எமது விழிப்புணர்வும் இத்தகையது! பகலில் விழிப்புணர்வுடன் இருந்து இரவில் விழிப்புணர்வை தூக்கத்தில் இழந்து விடுகிறோம்! நாம் எம்மை மலராக எண்ணி அதை புத்தரின் பாதத்தில் சமர்ப்பித்தால் எமக்கு பூரண விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்று வேண்டுகிறோம் என்பது இதன் பொருள். இதை யோகத்தில் துரிய நிலை என்றும் தாயுமானார் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று கூறுகிறார். 
இங்கு மூன்று அருங்காட்சியகங்கள் உண்டு:
ஒன்று தலதா மாளிகையின் வரலாற்று அருங்காட்சியகம் 
இரண்டாவது சர்வதேச பௌத்த அருங்காட்சியகம் - தெற்கு, கிழக்கு ஆசியாவின் பௌத்த வரலாற்றினை கலாச்சாரத்தினை எடுத்துக் கூறுவது. 
மூன்றாவது தொல்லியல் துறையின் கண்டி மன்னர் அரண்மனை அருங்காட்சியகம். இது அரசன் வாழ்ந்த அரண்மனையினது தொல்லியல் சின்னங்களைக் கொண்டிருக்கிறது. 
இலங்கையில் பௌத்தம் மகாவிகாரை, அபயகிரி, ஜேதவனராம ஆகிய மூன்று பாரம்பரியங்களைக் கொண்டதும் இதில் அபயகிரி, ஜேதவனராம ஆகிய இரண்டும் மகாயான மரபிற்குரியது என்பதும் சிறப்புச் செய்திகள்: Thanam Vettivelu ஐயா அவர்கள் அடிக்கடி மகாயானம் பற்றி பல செய்திகள் பதிவிடுவது ஞாபகம் வந்தது. 
பௌத்த கலாச்சாரம், இலங்கை பௌத்த வரலாறு ஆகியவற்றை அறிய விரும்புவர்கள் ஒரு நாள் அமைதியாக கற்கும் எண்ணத்துடன் இந்த அருங்காட்சியகங்களைப் பார்வையிட வேண்டும். இது முழுமையானதா என்பதை இன்னும் ஆராய வேண்டும்.
தொல்லியல் துறையின் வெளியீடுகள் சிலதையும் பார்த்தாயிற்று! சோழர்கால சிவ, பார்வதி, விஷணு ரூபங்களையும் தொகுத்து வைத்திருக்கிறார்கள். 
இங்கு பலரும் யாழ் நூலகத்தை அழித்தார்கள் என்று பொங்கிக் கொண்டிருப்பதைப் போல் அவர்களும் எமது மாளிகைக்கு குண்டு வைத்தான் பார் என்று அருங்காட்சியகத்தில் படம் எடுத்து மாட்டி வைத்திருக்கிறார்கள்: இரண்டையும் எண்ணும் போது எல்லா மனிதர்களும் அடிப்படை மனித இயல்பு குரோதமும், ஒருவரை ஒருவர் அழிக்கும் எண்ணம் உள்ளது என்றே எண்ணத் தோன்றியது. 
நாம் வரலாறுகளை கவனமாகப் படித்து அவற்றைக் குரோதம் வளர்க்காமல் ஒற்றுமையை நோக்கிச் செல்வது எப்படி என்று பலம் பெறவேண்டும்.
#பயணம்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...